வழக்கமாக சுப்பர் மார்க்கெட்டில் பொருட்களை கொள்வனவு செய்யும் ஓர் அன்பர் தனது அனுபவத்தை சொல்லி வாடிக்கையாளர்களுக்கு ஓர் அறிவுறுத்தலை வழங்குகிறார்.
இவர் கொள்வனவு செய்த பொருட்களுடன் வீடு திரும்பிய பின் ரசீதுடன் பொருட்களை ஒவ்வொன்றாக ஒப்பிட்டுப் பார்த்தார். அப்போது ஒரு பொருளுக்கு இரு தடவைகள் விலை பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
"இது எனக்கு முதல் தடவையாக நடந்த விடயமல்ல. முன்னரும் இப்படி நிகழ்ந்திருக்கிறது. ரசீதை தயாரிக்கும் இளம் பெண்ணின் கவனக் குறைவே இதற்குக் காரணம்" என்றார்.
ஆகவே, வாடிக்கையாளர்கள் தாம் கொள்வனவு செய்த பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமுன் சுப்பர் மார்க்கெட்டில் வைத்தே ரசீதை ஒரு தடவை பரிசீலித்தால் தவறுகளை கண்டுபிடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இவரின் அறிவுரையை பின்பற்றலாமே!