பெய்ஜிங்: சீனாவிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று காலை இக்ஹோட்டலில் பரவிய தீயை அணைப்பதற்காக அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இச்சம்பவத்திலிருந்து 23 பேரை காப்பாற்றியுள்ள போதும், 11 பேர் மருத்துவமனையில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இப்பகுதியிலுள்ள கட்டடமொன்றில் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் 21 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.