Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
[16 - February - 2008] [Font Size - A - A - A]
*அமைச்சர் அருள்சாமி தெரிவிப்பு

ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே மலையக பெருந்தோட்டப்புற மாணவர்களின் கல்வி பின்னடைவிற்கு பிரதான காரணம் என்று மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்தார்.

அண்மையில் ஹைபொரஸ்ட் இலக்கம் 3 ஆம் தோட்டப்பிரிவில் வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஷ்ரீ ஷ்ரீ பாலர் பாடசாலையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது;

மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதி பெறுகின்ற மாணவர்கள் `அ' என்ற எழுத்துகூட எழுதுவதில் மிகவும் சிரமமடைகின்றனர். இந்நிலையில் இம்மாணவர்களது ஆரம்பக்கல்வி முதலாம் தரத்திலேயே ஆரம்பமாகின்றது.

இதனால், இம்மாணவர்கள் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை, பல்கலைக்கழக கல்வி போன்றவற்றில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

ஆனால், இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்கள் தங்களது பிள்ளைகளை ஆரம்பக் கல்வியில் அக்கறை எடுத்து ஆங்காங்கே பாலர் பாடசாலைகளை உருவாக்கி, கல்வி வளர்ச்சிக்கான அத்திவாரத்தை உரிய முறையில் இடுகின்றனர். இந்த வாய்ப்பு எமது சமூகத்திற்கு கிடைப்பதில்லை.

எனவே, ஷ்ரீ ரவிசங்கரினால் நடத்தப்படும் வாழும் கலைப் பயிற்சி நிலையம் இவ்வாறான பாலர் பாடசாலைகளை தோட்டப்புறங்களில் உருவாக்குவது தோட்டப்புற மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் இடும் நல்லதொரு காரியமாகவே அமைகின்றது.

இதுபோன்ற முன்மாதிரியான செயல்களை மலையகத்திலுள்ள ஆன்மீக மன்றங்கள், மதநிறுவனங்கள், இவ்வாறான பாலர் பாடசாலைகளை உருவாக்கி பெருந்தோட்டப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அத்திவாரம் இடவேண்டியது அவசியமாகும்.

மலையக மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுபவர்களாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் இருக்கும் நிலை மாற்றம் பெற வேண்டும்.

மலையக மாணவர்கள் கல்வியில் வளர்ச்சியடைவதன் மூலமே இந்நிலைமையை மாற்றியமைக்க முடியும். எனவே, வெறுமனே சம்பிரதாயமாக உருவாக்கப்படும் அரசியல் தொழிற்சங்க கோட்பாடுகள் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை மலையக மக்களின் 187 ஆண்டு லய வாழ்க்கை நிரூபித்துள்ளது.

ஆகவே, பெற்றோர்கள் எதிர்கால சமூகத்தை ஒரு கல்விசார் சமூகமாக மாற்றுவதற்கு முன்நின்று செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
ஐ.நா. வதிவிட பிரதிநிதி குடாநாடு விஜயம்
குடும்பஸ்தரை காணவில்லை
பாணந்துறையில் ஆயுதபொதி மீட்பு
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
ஸ்ரீபதியின் மரணத்தில் சந்தேகம் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
முதலாவது பெண் பரசூட் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்?
படையினருக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பெரும் பரபரப்பு
உறுப்பினர்களின் வெளிநாட்டு பயண விவகாரம் தென் மாகாண சபைக்கூட்டம் ஒத்திவைப்பு
ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்து நோயாளியொருவர் மரணம்
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
குடிமக்களெவரும் இல்லாது வெறிச்சோடிய நிலையில் திருகோணமலையின் 24 கிராம சேவகர் பிரிவுகள்
`விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களால் தெற்கில் தமிழர்களை நாம் வெறுக்கக்கூடாது'
ஸ்பிறிங்வெலி தோட்டத்தில் தங்கியிருந்த பெண் வாள்வெட்டுக்கு பலி; இளைஞன் படுகாயம்
கலைப்பீட விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு ரயில் இணைப்பு பஸ்சேவையை அதிகரிக்க கோரிக்கை
வெளிநாட்டு பிரஜைக்கு விளக்கமறியல்
வடக்கு பதிவாளர் நாயக திணைக்களத்தால் காலங்கடந்த பதிவுகள் பணி நிறைவு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கல்வி அதிகாரிகளின் சந்திப்பில் ஆராய்வு
பாரபட்சமான நீர்க் கட்டண அறவீட்டுக்கு எதிராக றிஷாத் பதியுதீன் உடன் நடவடிக்கை
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
இமாம் எம்.பி.யின் முயற்சியால் நிவாரணம் வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளுடன் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை
பாதுகாப்பு என்ற பெயரில் ஆசிரியர்களின் பொதிகளையும் சோதனையிட எதிர்ப்பு
மின்சாரம் தாக்கியதில் வர்த்தகர் உயிரிழப்பு
டெங்கு நோயினால் 45 தினங்களில் 3 பேர் உயிரிழப்பு; 36 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
தண்ணீரை வீண்விரயமாக்காது செயற்பட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாது
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க உத்தரவு
சகல தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுமாறு அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com