Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
[16 - February - 2008] [Font Size - A - A - A]
*முன்னாள் இராணுவ அதிகாரி சாட்சியம்

-டிட்டோகுகன்-

ஜே.வி.பி.யினருக்கு 80களின் பிற்பகுதிகளில் விடுதலைப் புலிகளுடன் ஆயுதத் தொடர்பு இருந்ததாகவும் அவர்கள் புலிகளிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருந்ததாகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை கொழும்பு பிரதான மாவட்ட நீதிவான் சிசிர ரத்னாயக்க முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி இவ்வாறு சாட்சியமளித்திருக்கிறார்.

2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வொன்றில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் வசந்த விமலசிறி பெரேரா என்பவரே இவ்வாறு சாட்சியமளித்திருக்கிறார்.

தனது பெயருக்கு களங்கம் விளைவித்தமைக்கான நட்டஈடாக விமல் வீரவன்ச தனக்கு 5 கோடி ரூபாவை வழங்க வேண்டுமென்றும் வசந்த பெரேரா தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு தொடர்பான விசாரணைகள் திங்கட்கிழமை பிரதான மாவட்ட நீதிவான் சிசிர ரத்னாயக்க முன்னிலையில் எடுத்துக்கொண்டபோது சாட்சியமளித்த மேஜர் ஜெனரல் பெரேரா, 88/89 காலப் பகுதிகளில் தான் காலி மாவட்ட இணைப்பாளராகவும் படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றியபோது ஜே.வி.பி.யினரின் வன்முறை நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்க செயற்பட்டதுடன் அவை தொடர்பாக அரசுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், ஜே.வி.பி.யினருக்கு புலிகளுடன் ஆயுதத் தொடர்புகள் இருந்ததுடன், அவர்கள் புலிகளிடமிருந்து அம்பாந்தோட்டை வழியாக ஆயுதங்களை பெற்றிருந்ததாகவும் அவற்றை தடுக்கத் தான் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் சாட்சியமளித்திருக்கிறார்.

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ரெலிகொம் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் அதன் பின்னர் முதலீட்டு சபையில் பணிப்பாளராகவும் தான் பணிபுரிந்தபோதிலும் விமல் வீரவன்ச தொலைக்காட்சி மூலம் தன் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளினால் தான் செய்து வந்த தொழிலையும் (முதலீட்டு சபை பணிப்பாளர்) இழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் பெரேரா மாவட்ட நீதிவான் முன்னிலையில் தெரிவித்திருக்கிறார்.

இதேநேரம், விமல் வீரவன்ச தெரிவித்திருப்பது போல் தான் எந்த அரசியல் செல்வாக்கிலும் அந்தப் பதவிக்கு வரவில்லையென்றும் அவர் மன்றில் சாட்சியமளித்திருக்கிறார்.

மேஜர் ஜெனரல் பெரேரா சாட்சியமளிக்கும்போது விமல் வீரவன்ச எம்.பி.யும் மன்றில் ஆஜராகியிருந்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
ஐ.நா. வதிவிட பிரதிநிதி குடாநாடு விஜயம்
குடும்பஸ்தரை காணவில்லை
பாணந்துறையில் ஆயுதபொதி மீட்பு
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
ஸ்ரீபதியின் மரணத்தில் சந்தேகம் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
முதலாவது பெண் பரசூட் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்?
படையினருக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பெரும் பரபரப்பு
உறுப்பினர்களின் வெளிநாட்டு பயண விவகாரம் தென் மாகாண சபைக்கூட்டம் ஒத்திவைப்பு
ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்து நோயாளியொருவர் மரணம்
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
குடிமக்களெவரும் இல்லாது வெறிச்சோடிய நிலையில் திருகோணமலையின் 24 கிராம சேவகர் பிரிவுகள்
`விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களால் தெற்கில் தமிழர்களை நாம் வெறுக்கக்கூடாது'
ஸ்பிறிங்வெலி தோட்டத்தில் தங்கியிருந்த பெண் வாள்வெட்டுக்கு பலி; இளைஞன் படுகாயம்
கலைப்பீட விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு ரயில் இணைப்பு பஸ்சேவையை அதிகரிக்க கோரிக்கை
வெளிநாட்டு பிரஜைக்கு விளக்கமறியல்
வடக்கு பதிவாளர் நாயக திணைக்களத்தால் காலங்கடந்த பதிவுகள் பணி நிறைவு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கல்வி அதிகாரிகளின் சந்திப்பில் ஆராய்வு
பாரபட்சமான நீர்க் கட்டண அறவீட்டுக்கு எதிராக றிஷாத் பதியுதீன் உடன் நடவடிக்கை
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
இமாம் எம்.பி.யின் முயற்சியால் நிவாரணம் வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளுடன் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை
பாதுகாப்பு என்ற பெயரில் ஆசிரியர்களின் பொதிகளையும் சோதனையிட எதிர்ப்பு
மின்சாரம் தாக்கியதில் வர்த்தகர் உயிரிழப்பு
டெங்கு நோயினால் 45 தினங்களில் 3 பேர் உயிரிழப்பு; 36 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
தண்ணீரை வீண்விரயமாக்காது செயற்பட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாது
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க உத்தரவு
சகல தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுமாறு அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com