Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
[16 - February - 2008] [Font Size - A - A - A]
*அநுராதபுர பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு

தோல்வியடைந்து செய்வதறியாது திகைத்து நிற்கும் விடுதலைப் புலிகள் தெற்கில் பாரிய அழிவொன்றை ஏற்படுத்த முற்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கிலேயே மாவட்டம் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என மின்சக்தி, எரிசக்தித் துறை அமைச்சரும் மாவட்ட மட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் தேசிய அமைப்பாளருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுவினை அமைக்கும் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை அநுராதபுரம் மத்திய வங்கி கேட்போர்கூடத்தில் மாவட்டச் செயலாளர் எச்.எம்.கே.ஹேரத் தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"பொதுமக்களை இலக்குவைத்து பல தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்திவிட்டார்கள். இராணுவத்தினரின் கவனத்தை திசைதிருப்பி வன்னி மீதான தாக்குதலை நிறுத்தும் நோக்கிலேயே இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்கின்றனர். இவ்வாறான தாக்குதல்களினால் பாதிக்கப்படுவது இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகத்தவர்களுமே.

பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்துநிறுத்துவதற்கு முப்படையினரின் சோதனை நடவடிக்கைகள் மட்டும் போதுமானதல்ல. பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. தற்போது பொதுமக்கள் விழிப்படைந்துள்ளார்கள் என்பது கடந்த காலங்களில் அவர்கள் வழங்கிய தகவல்கள் மூலம் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பல தோல்வியடைந்ததிலிருந்து தெளிவாகின்றது.

சக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகள் மற்றும் நேரக்கணிப்புக் குண்டுகள் பலவற்றை கண்டுபிடித்து உதவி இந்நாட்டின் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

மாவட்டத்திலுள்ள முன்னூறு இளைஞர்கள் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவர். இன, மத மற்றும் கட்சிப் பாகுபாடின்றியே இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். பொலிஸாருக்கு உதவி தேவைப்படும் வேளையில் இவர்களது உதவியைப் பொலிஸார் பெற்றுக்கொள்ளலாம். இது தவிர ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் ஒவ்வொரு கணினி வழங்கப்பட்டு பொலிஸ் நிலையப் பகுதியில் வாழும் குடும்பங்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு பதிந்து வைக்கப்படும். இதற்கு கணினி அறிவு உள்ள இளைஞர் ஒருவரும் பொலிஸ் நிலையங்கள் தோறும் நியமிக்கப்படுவர்" என்றார்.

இவ்வைபவத்தில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க, வடமத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பீ.பீ.பத்திரன, சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் சிரிசேன ஹேரத், சிவில் பாதுகாப்பு அணியின் பணிப்பாளர் ஜெனரல் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுள்கனே, தேச நிர்மாணத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க உட்பட நகரசபை, பிரதேச சபை தலைவர்களும் பங்கு பற்றினர்.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
ஐ.நா. வதிவிட பிரதிநிதி குடாநாடு விஜயம்
குடும்பஸ்தரை காணவில்லை
பாணந்துறையில் ஆயுதபொதி மீட்பு
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
ஸ்ரீபதியின் மரணத்தில் சந்தேகம் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
முதலாவது பெண் பரசூட் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்?
படையினருக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பெரும் பரபரப்பு
உறுப்பினர்களின் வெளிநாட்டு பயண விவகாரம் தென் மாகாண சபைக்கூட்டம் ஒத்திவைப்பு
ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்து நோயாளியொருவர் மரணம்
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
குடிமக்களெவரும் இல்லாது வெறிச்சோடிய நிலையில் திருகோணமலையின் 24 கிராம சேவகர் பிரிவுகள்
`விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களால் தெற்கில் தமிழர்களை நாம் வெறுக்கக்கூடாது'
ஸ்பிறிங்வெலி தோட்டத்தில் தங்கியிருந்த பெண் வாள்வெட்டுக்கு பலி; இளைஞன் படுகாயம்
கலைப்பீட விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு ரயில் இணைப்பு பஸ்சேவையை அதிகரிக்க கோரிக்கை
வெளிநாட்டு பிரஜைக்கு விளக்கமறியல்
வடக்கு பதிவாளர் நாயக திணைக்களத்தால் காலங்கடந்த பதிவுகள் பணி நிறைவு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கல்வி அதிகாரிகளின் சந்திப்பில் ஆராய்வு
பாரபட்சமான நீர்க் கட்டண அறவீட்டுக்கு எதிராக றிஷாத் பதியுதீன் உடன் நடவடிக்கை
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
இமாம் எம்.பி.யின் முயற்சியால் நிவாரணம் வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளுடன் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை
பாதுகாப்பு என்ற பெயரில் ஆசிரியர்களின் பொதிகளையும் சோதனையிட எதிர்ப்பு
மின்சாரம் தாக்கியதில் வர்த்தகர் உயிரிழப்பு
டெங்கு நோயினால் 45 தினங்களில் 3 பேர் உயிரிழப்பு; 36 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
தண்ணீரை வீண்விரயமாக்காது செயற்பட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாது
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க உத்தரவு
சகல தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுமாறு அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com