பாணந்துறை பகுதியில் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.
பாணந்துறை, ஜனப்பிரிய மாவத்தை எனும் பிரதேசத்திலேயே இந்த பொதி கண்டெடுக்கப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை 4.30 மணியளவிலேயே இது கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கைவிடப்பட்ட நிலையிலிருந்த நடைபாதை கடையொன்றை சோதனையிட்ட போதே குறித்த பொதி அகப்பட்டுள்ளது.
இதையடுத்து குண்டு செயலிழக்கும் பிரிவினைக் கொண்டு அந்த பொதி பிரித்து பார்க்கப்பட்ட போது அதில் கைக்குண்டொன்றும் "ரி-56" ரக துப்பாக்கி ரவைகள் 300ம் வெடிமருந்துகளும் இருக்க காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.