13 ஆவது திருத்தத்தின் கீழ் இன நெருக்கடிக்கு தீர்வில்லை - ஏற்றுக்கொண்டார் அமெரிக்கத் தூதுவர் எனும் தலைப்பில் நேற்று முன்தினம் வெளியான தலைப்புச் செய்தி தொடர்பாக அமெரிக்க தூதுவர் ரொவேர்ட் பிளேக் விளக்கமளித்துள்ளார்.
அவரின் விளக்கம் வருமாறு;
2008 பெப்ரவரி 14 ஆம் திகதி உங்கள் தினக்குரலில் பிரசுரித்த என்னுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடான சந்திப்பு சம்பந்தமாக மேலும் விளக்கிக் கூற விரும்புகின்றேன். "13 ஆவது திருத்தத்தின் கீழ் இன நெருக்கடிக்கு தீர்வில்லை - ஏற்றுக்கொண்டார் அமெரிக்க தூதுவர்" எனும் தலைப்பின் கீழ் பிரசுரமானதை வித்தியாசமான முறையில் நான் கூறியதாக நம்புகிறேன். மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஓர் நல்ல முதல் அத்தியாயமாக 13 ஆவது திருத்த அமுலாக்கம் அமையுமென அமெரிக்கா நம்புகின்றது.
மேலும் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. சர்வகட்சிக் குழுவின் முக்கிய பணிகளைத் தொடர்வதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் எமக்கு நம்பிக்கையூட்டுகிறது. தமிழ் மற்றும் ஏனைய சமூகங்களின் அபிலாஷைகள் நிறைவேறக்கூடிய அதிகாரப் பகிர்வுக்கான இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக் கூடிய நல்ல சந்தர்ப்பத்தை சர்வகட்சிக் குழு வழங்குகிறது. அதன்மூலம் ஒரு ஐக்கிய இலங்கையினுள்ளே நம்பிக்கையும் வாய்ப்புகளுமுள்ள எதிர்காலத்தை அநுபவிக்கலாமென வன்னியிலும் மற்றுமிடங்களிலும் வசிக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடியும்.
எனது கருத்துக்களை விளக்கிக் கூற சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி.