Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
[16 - February - 2008] [Font Size - A - A - A]
*புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன்

இலங்கை அரசும் படைத்தரப்பும் கூறுவது போல் வடக்கில் தங்களுக்கு எதுவித இராணுவ அழுத்தங்களுமில்லையெனவும் விரைவில் அவர்கள் உண்மை நிலையை உணருவார்களெனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தினக்குரலுக்கு மேலும் கூறுகையில்;

வடக்கில் பல்வேறு முனைகளிலும் தினமும் படையினர் முன்னேறுவது போன்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்க அரசும் படைத்தரப்பும் முனைகின்றன.

ஆனால், உண்மையில் களநிலை அவ்வாறில்லை. களமுனையிலுள்ள படையினருக்கு இது நன்கு தெரியும். தினமும் அவர்கள் பேரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். கொல்லப்படும் படையினரின் உடல்களைக்கூட அந்தந்தப் பகுதியிலேயே புதைத்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் தாங்கள் வெற்றிகளைப் பெறுவதுபோல் தெற்கில் பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எவ்வித உண்மையுமில்லை. சிங்கள மக்களை ஏமாற்றவே அரசும் படைத்தரப்பும் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

வடக்கில் தினமும் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல்கள் மூலம் மக்களை அச்சுறுத்த முயல்கின்றனர். ஆனால், அந்த அச்சுறுத்தல்களால் மக்கள் அச்சமடைவதில்லை. அவர்கள் இவற்றுக்கு பழக்கப்பட்டுவிட்டனர்.

இராணுவ ரீதியில் எதுவுமே செய்ய முடியாதென்ற நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். இதனாலேயே எமது தலைவர் குறித்து அடிக்கடி பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவற்றிலெல்லாம் எதுவித உண்மையுமில்லை. அவரை நெருங்கக்கூட முடியாது.

சமாதான முயற்சிகளில் கூட இலங்கை அரசுக்கு நாட்டமில்லை. நோர்வேயையும் ஒதுக்கிவிட அவர்கள் முயல்கின்றனர். பல நாடுகளையும் பகைத்துள்ளனர். ஐ.நா. அமைப்புகளுடன் கூட அவர்கள் முரண்பட்டுள்ளனர்.

அனைவரையும் பகைத்துவரும் இலங்கை அரசு இன்று தென்பகுதி மக்களை பெரிதும் ஏமாற்ற முயல்கிறது. எனினும், விரைவில் அந்த மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்களென்றும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
ஐ.நா. வதிவிட பிரதிநிதி குடாநாடு விஜயம்
குடும்பஸ்தரை காணவில்லை
பாணந்துறையில் ஆயுதபொதி மீட்பு
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
ஸ்ரீபதியின் மரணத்தில் சந்தேகம் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
முதலாவது பெண் பரசூட் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்?
படையினருக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பெரும் பரபரப்பு
உறுப்பினர்களின் வெளிநாட்டு பயண விவகாரம் தென் மாகாண சபைக்கூட்டம் ஒத்திவைப்பு
ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்து நோயாளியொருவர் மரணம்
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
குடிமக்களெவரும் இல்லாது வெறிச்சோடிய நிலையில் திருகோணமலையின் 24 கிராம சேவகர் பிரிவுகள்
`விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களால் தெற்கில் தமிழர்களை நாம் வெறுக்கக்கூடாது'
ஸ்பிறிங்வெலி தோட்டத்தில் தங்கியிருந்த பெண் வாள்வெட்டுக்கு பலி; இளைஞன் படுகாயம்
கலைப்பீட விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு ரயில் இணைப்பு பஸ்சேவையை அதிகரிக்க கோரிக்கை
வெளிநாட்டு பிரஜைக்கு விளக்கமறியல்
வடக்கு பதிவாளர் நாயக திணைக்களத்தால் காலங்கடந்த பதிவுகள் பணி நிறைவு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கல்வி அதிகாரிகளின் சந்திப்பில் ஆராய்வு
பாரபட்சமான நீர்க் கட்டண அறவீட்டுக்கு எதிராக றிஷாத் பதியுதீன் உடன் நடவடிக்கை
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
இமாம் எம்.பி.யின் முயற்சியால் நிவாரணம் வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளுடன் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை
பாதுகாப்பு என்ற பெயரில் ஆசிரியர்களின் பொதிகளையும் சோதனையிட எதிர்ப்பு
மின்சாரம் தாக்கியதில் வர்த்தகர் உயிரிழப்பு
டெங்கு நோயினால் 45 தினங்களில் 3 பேர் உயிரிழப்பு; 36 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
தண்ணீரை வீண்விரயமாக்காது செயற்பட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாது
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க உத்தரவு
சகல தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுமாறு அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com