ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தியாகராசா மகேஸ்வரனின் 45ஆம் நாள் நினைவு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸவிதாரண ஆகியோர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.
`நமக்காக நாம்' வேலைத்திட்டத்தின் மூலமாக படையினருக்கு 50 ஆயிரம் வீடுகளை நிர்
மாணித்துக்கொடுக்க முன்வந்த தொழிலதிபர்கள் சிலர் அதற்குரிய ஆவணங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் அலரிமாளிகையில் கையளிப்பதைக் காணலாம்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் தலைமையில் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற உலகின் 155 நாடுகளின் விசேட பிரதிநிதிகள் பங்குகொண்ட 56 ஆவது தேசிய சந்திப்பிற்கு இலங்கை சார்பாக பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க. உதவிச் செயலாளருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன கென்யாவின் உப ஜனாதிபதியான ஸ்டீபன் கே.மஷியோகாவை வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சந்தித்தபோது.....