Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
25 தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் கைது இந்திய கடற்படை 21 சிங்கள மீனவரை சிறைப்பிடிப்பு
[01 - March - 2008] [Font Size - A - A - A]
இலங்கை கடற்படையினரால் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை இந்திய கடலோர காவல் படையினரால் 21 சிங்களமீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி 25 தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் கடந்த 27 ஆம் திகதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை கரை திரும்பாததால் கலவரமடைந்த உறவினர்கள் தேடுதலில் இறங்கிய போது 25 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தமை தெரியவந்தது.

இதனால், நேற்று மீன் பிடிக்கிராமங்களில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. உறவினர்கள் இது குறித்து மீன் துறை அமைச்சிடமும் கடலோர காவல் படையினரிடமும் முறைப்பாடு செய்தனர். தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியாளர் சோதி நிர்மலா தெரிவித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் அவர்களின் விசைப்படகுகளும் நீர்கொழும்பு என்ற இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நாகர் கோவில் மீன்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இதேநேரம் இந்திய கடல்எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 சிங்கள மீனவர்களை இந்திய கடலோர கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.

காரைக்கால் மற்றும் நாகை கடல் பகுதியில் 4 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களில் சந்தேகமடைந்த கடலோரக் காவல் படையினர் அவர்களின் படகுகளை சுற்றிவளைத்தனர்.

படகுகளுக்குள் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியே வரும்படி அழைத்த போது தாம் சிங்கள மீனவர்கள் எனவும் தங்களை எதுவும் செய்ய வேண்டாமெனவும் கூறியபடி மீனவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 21 மீனவர்கள் தொடர்பாகவும் இலங்கை தூதரகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கடலோரக் காவற்படை அதிகாரி ஷ்ரீகாந்த் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
நள்ளிரவு முதல் ஷெல்காஸின் விலை 261 ரூபாவால் உயர்வு
மின் கட்டண அதிகரிப்பு தற்போதைக்கு ஒத்திவைப்பு
வெறும் வளவொன்றுக்குள் அங்கிகள், கிளைமோர்கள் மீட்பு
அரசியலமைப்பு பேரவையை உடனடியாக இயங்கச் செய்யாவிடின் சட்ட நடவடிக்கை
25 தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் கைது இந்திய கடற்படை 21 சிங்கள மீனவரை சிறைப்பிடிப்பு
கட்டுக்கரைக்குளம், பண்டிவிரிச்சான் பகுதிகளில் படையினர், விடுதலைப்புலிகள் கடும் மோதல்
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சுனில் சரத்பெரேரா பதவி நீக்கம்
வாக்காளர் பட்டியல் தமிழ் மொழியிலும் வெளியிடப்படவேண்டியது கடப்பாடு
ஜே.வி.பி. தொடர்பான பேச்சு எழவுமில்லை மாநாட்டிற்கு அவர்களை அழைக்கவுமில்லை
ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியுடன் பேச்சு
நுவரெலியா பீட்றூ தோட்டத்தில் திடீர் தீ விபத்து; வீடு எரிந்து நாசம்
ருகுணு அபிவிருத்தி வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை
உடரட்டமெனிக்கேயில் தமிழ் இளைஞன் கைது
ரூபா 1,120 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை ஆஸ்திரியா வழங்கும்
வகுப்பு நடத்தும் வேளையில் கையடக்க தொலைபேசியில் அதிகநேரம் கதைக்கும் ஆசிரியர்கள்
வன்னி களமுனையில் உயிரிழந்த மேலும் 8 புலிகளின் விபரங்கள் அறிவிப்பு
அட்டன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
முந்தல் பிரதேசத்தில் பாதுகாப்புக் குழு
யுவதியின் சடலம் ஆஸ்பத்திரியில் ஒப்படைப்பு
நுவரகம செயலகப் பிரிவில் 7 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிப்பு
`வடக்கு போர் முனை தொடர்பாக தெற்கிற்கு முரண்பட்ட தகவல்கள்'
கல்லடிப்பாலம் அமைப்பது தொடர்பான அரசின் பிரசாரம் மக்களை ஏமாற்றும் முயற்சியாகும்
கோதாபய ராஜபக்ஷ வழக்கு விசாரணை
இறுதி லீக் போட்டியில் அவுஸ்திரேலியா இலங்கை அணியிடம் தோல்வியுற்றது
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் விரைவில் நாடு கடத்தல் ஒப்பந்தம்
விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்களே புத்தல பகுதியில் தாக்குதல்களை நடத்துகின்றனர்
குண்டு வைத்திருப்பதாக விமானப் பயணிகளை மிரட்டிய நபருக்கு நீதிமன்றம் பிணை அனுமதி
`குடாநாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துங்கள்'
ஆலையடிவேம்பு மக்களை வீடியோ படம் படையினர் எடுத்தமை கண்டிக்கத்தக்கது
வன்முறை சாராத தொடர்பாடல் முறைகள் பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தப்படுதல் வேண்டும்
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி மார்ச்சுடன் ஓய்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com