Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசியலமைப்பு பேரவையை உடனடியாக இயங்கச் செய்யாவிடின் சட்ட நடவடிக்கை
[01 - March - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க. எச்சரிக்கை

எம்.ஏ.எம்.நிலாம்

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்துக்கமைய ஜனாதிபதி உடனடியாக அரசியலமைப்புப் பேரவையை அமைக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தவறினால் அனைத்து எதிர்க் கட்சிகளுடனும் இணைந்து நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படலாமென எச்சரித்துள்ளது.

அரசியலமைப்பின் 42 ஆவது ஷரத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியல் யாப்பை மதிக்காமல் தன்னிச்சையாக செயற்பட முனைவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

17 ஆவது அரசியலமைப்புத் திருத்தமென்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அதனை புறந்தள்ளிச் செயற்பட எவராலும் முடியாது. நாட்டின் ஜனாதிபதியும் பிரதமர் உட்பட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்கும் போது செய்யும் பதவிப் பிரமாணத்தின்போது நாட்டின் அரசியலமைப்புக் கிணங்கவும் அதனைப் பாதுகாப்பதற்கும் உறுதி மொழியளித்தே பதவியேற்றுள்ளனர். ஆனால், 17 ஆவது அரசியலமைப்பின் படி அரசியலமைப்புப் பேரவையை அமைக்கும் விடயத்தில் யாப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் காலால் உதைத்தெறிந்துள்ளனர். அரசியலமைப்புக்கு விரோதமாகவே அரசாங்கமும் ஜனாதிபதியும் செயற்பட்டு வருகின்றனர்.

அரசியலமைப்புப் பேரவைக்கான பெயர்ப் பட்டியலை பாராளுமன்றம் சமர்ப்பித்து நீண்ட காலமாகிவிட்டன. இதன்படி ஜனாதிபதி தமது பிரதிநிதியை நியமித்து அரசியலமைப்புப் பேரவையை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும். அரசியலமைப்பின் 42 ஆவது ஷரத்துக்கமைய ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தமது பொறுப்பை நிறைவேற்றாமல் 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவுக்குழுவின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை அரசியலமைப்புப் பேரவையை அமைக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தல் முறை மாற்றத்துக்காக ஆராய்வதற்கு தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளோ சிபாரிசுகளோ இன்னமும் வெளியிடப்படவில்லை. அதற்காக தேர்தல்கள் நடத்தாமல் கைவிடப்பட்டுள்ளனவா? எனக் கேட்கின்றேன். 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் காணப்படும் குறைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழு கடந்த ஆறு மாத காலமாக கூட்டப்படவே இல்லை.

ஜனாதிபதியும் அரசாங்கமும் சுயாதீன ஆணைக்குழுக்களை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டே அரசியலமைப்புப் பேரவையை நியமிப்பதை தவிர்த்து வருகின்றது. ஆளும்தரப்பினர் தமது சுயநல அரசியல் செயற்பாடுகளுக்காக இந்தத் தவறான முடிவை எடுத்திருப்பதாகவே மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றோம். இது இறுதிச் சந்தர்ப்பமாகக் கூட அமையலாம். இப்போது அரசியலமைப்புப் பேரவை அமைக்கும் விடயத்தில் எதிர்க் கட்சிகள் கூட்டாக செயற்பட்டு இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்பையும் பாராளுமன்ற இறைமையையும் பாதுகாப்பதற்காக அனைத்துச் சக்திகளையும் இணைத்துச் செயற்படத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் புத்திஜீவிகள், மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதாகவும் ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
நள்ளிரவு முதல் ஷெல்காஸின் விலை 261 ரூபாவால் உயர்வு
மின் கட்டண அதிகரிப்பு தற்போதைக்கு ஒத்திவைப்பு
வெறும் வளவொன்றுக்குள் அங்கிகள், கிளைமோர்கள் மீட்பு
அரசியலமைப்பு பேரவையை உடனடியாக இயங்கச் செய்யாவிடின் சட்ட நடவடிக்கை
25 தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் கைது இந்திய கடற்படை 21 சிங்கள மீனவரை சிறைப்பிடிப்பு
கட்டுக்கரைக்குளம், பண்டிவிரிச்சான் பகுதிகளில் படையினர், விடுதலைப்புலிகள் கடும் மோதல்
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சுனில் சரத்பெரேரா பதவி நீக்கம்
வாக்காளர் பட்டியல் தமிழ் மொழியிலும் வெளியிடப்படவேண்டியது கடப்பாடு
ஜே.வி.பி. தொடர்பான பேச்சு எழவுமில்லை மாநாட்டிற்கு அவர்களை அழைக்கவுமில்லை
ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியுடன் பேச்சு
நுவரெலியா பீட்றூ தோட்டத்தில் திடீர் தீ விபத்து; வீடு எரிந்து நாசம்
ருகுணு அபிவிருத்தி வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை
உடரட்டமெனிக்கேயில் தமிழ் இளைஞன் கைது
ரூபா 1,120 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை ஆஸ்திரியா வழங்கும்
வகுப்பு நடத்தும் வேளையில் கையடக்க தொலைபேசியில் அதிகநேரம் கதைக்கும் ஆசிரியர்கள்
வன்னி களமுனையில் உயிரிழந்த மேலும் 8 புலிகளின் விபரங்கள் அறிவிப்பு
அட்டன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
முந்தல் பிரதேசத்தில் பாதுகாப்புக் குழு
யுவதியின் சடலம் ஆஸ்பத்திரியில் ஒப்படைப்பு
நுவரகம செயலகப் பிரிவில் 7 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிப்பு
`வடக்கு போர் முனை தொடர்பாக தெற்கிற்கு முரண்பட்ட தகவல்கள்'
கல்லடிப்பாலம் அமைப்பது தொடர்பான அரசின் பிரசாரம் மக்களை ஏமாற்றும் முயற்சியாகும்
கோதாபய ராஜபக்ஷ வழக்கு விசாரணை
இறுதி லீக் போட்டியில் அவுஸ்திரேலியா இலங்கை அணியிடம் தோல்வியுற்றது
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் விரைவில் நாடு கடத்தல் ஒப்பந்தம்
விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்களே புத்தல பகுதியில் தாக்குதல்களை நடத்துகின்றனர்
குண்டு வைத்திருப்பதாக விமானப் பயணிகளை மிரட்டிய நபருக்கு நீதிமன்றம் பிணை அனுமதி
`குடாநாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துங்கள்'
ஆலையடிவேம்பு மக்களை வீடியோ படம் படையினர் எடுத்தமை கண்டிக்கத்தக்கது
வன்முறை சாராத தொடர்பாடல் முறைகள் பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தப்படுதல் வேண்டும்
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி மார்ச்சுடன் ஓய்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com