Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மட்டு. மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று தேர்தல்
[10 - March - 2008] [Font Size - A - A - A]
மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது. இத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தின் பாதுகாப்பு பெருமளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 101 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான இந்த தேர்தலில் 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 291 வாக்களிப்பு நிலையங்களில் 2 இலட்சத்து 70 ஆயிரத்து 471 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு முன்னொருபோதுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல வீதிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.

இத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் 4 ஆயிரம் ஊழியர்கள் உட்பட படையினர், விசேட அதிரடிப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரம் உட்பட அதனை அண்மித்த பகுதிகளில் பெருமளவு படையினர் கனரக வாகனங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகள் இயங்கிவரும் நிலையில், 2006.03.30 ஆம் திகதி காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் நகர் பிரதேச சபை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், ஏனைய மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று தேர்தல் இடம்பெறுகின்றது. இத்தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களிலிருந்தும் 831 பேர் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்குப் பிரதேச சபை, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை, போரதீவுப்பற்றுப் பிரதேச சபை, கோறளைப்பற்று வடக்குப் பிரதேச சபை, ஏறாவூர்பற்றுப் பிரதேச சபை, கோறளைப்பற்றுப் பிரதேச சபை ஆகிய 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கே தேர்தல் இடம்பெறுகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ், தேசிய அபிவிருத்தி முன்னணி மற்றும் ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகிய 6 கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபைக்குப் போட்டியிடும் நிலையில், ஏனைய 8 பிரதேச சபைகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்து போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, புளொட், ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து 9 உள்ளூராட்சி மன்றங்களிலும் கூட்டாக சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஈழவர் ஜனநாயக முன்னணி மண்முனைப்பற்று தவிர்ந்த ஏனைய 8 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய காங்கிரஸ் ஒரு உள்ளூராட்சி மன்றத்திலும் தேசிய அபிவிருத்தி முன்னணி 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுகின்றன.

1994 ஆம் ஆண்டு முதலாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்ற நிலையில், 2002 ஆம் ஆண்டு வேட்பு மனு கோரப்பட்டு நிறுத்தப்பட்டதுடன், 2006 ஆம் ஆண்டும் வேட்பு மனு கோரப்பட்டு மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கே தேர்தல் நடைபெற்றது. ஏனையவற்றுக்கு நிறுத்தப்பட்டது. அவற்றுக்கே இன்று தேர்தல் இடம்பெறுகின்றது.

291 வாக்களிப்பு நிலையங்களில் 2,70,471 பேர் வாக்களிக்கவுள்ளனர். இவற்றில் 6 வாக்களிப்பு நிலையங்கள் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்படாமல் உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையில் 54,948 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், 175 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களிலிருந்து 19 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

மண்முனைப்பற்றில் இருந்து 18,759 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 96 பேர் போட்டியிடுகின்றனர். 9 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

மண்முனை மேற்கில் 15,771 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 48 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 9 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

மண்முனை தென்மேற்கில் 14,880 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 36 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 9 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

போரதீவுப்பற்றிலிருந்து 28,116 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 24 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 9 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மண்முனை தென் எருவில்பற்றிலிருந்து 38,386 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 52 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 16 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

ஏறாவூர்பற்றிலிருந்து 45,336 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 190 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 14 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கோறளைப்பற்றிலிருந்து 41,856 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 135 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 11 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கோறளைப்பற்று வடக்கிலிருந்து 12,419 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 75 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 11 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மொத்தம் 101 மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலாக இது உள்ளது.

நேற்றுக் காலை முதல் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்திலிருந்து வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளையும் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

மட்டக்களப்பில் தற்போது கடும் மழை பெய்து வரும் நிலையிலும் அதிகாரிகள் பலத்த சிரமத்தின் மத்தியிலும் தங்களுக்கு பணிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றனர்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.

இந்துக் கல்லூரியை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில வீதிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினரும் உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் பெருமளவில் காணப்பட்டனர்.

தேர்தல் திணைக்கள தலைமைக் காரியாலயத்திலிருந்து பிரதித் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் 5 உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் நூற்றுக்கணக்கான உத்தியோகஸ்தர்கள் மட்டக்களப்பிற்கு தேர்தல் கடமைக்காக வந்துள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட சோதனைச் சாவடிகள், வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
மட்டு. மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று தேர்தல்
வவுனியாவில் கொள்ளையர் பெரும் அட்டகாசம் தப்பிச் செல்கையில் வீசிய குண்டால் இருவர் காயம்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு புகழ்பெற்ற மருத்துவர்கள் முடிவு
ஆலையடிவேம்பை அடிக்கடி சுற்றிவளைத்து மக்களை வீடியோ படமெடுக்கும் படையினர்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்னியில் நடேசனுடன் சந்திப்பு
தற்கொலை தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கியதாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் சுட்டுக்கொலை
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
அழகுபடுத்தும் நிலைய உரிமையாளர் கடத்தல்
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க கூட்டுத்தாபனம் திட்டம்
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபம் சர்வதேச சுயாதீனக்குழுவின் வெளியேற்றத்தால் அம்பலம்
தொழிற்சங்க தலைமைத்துவங்களால் தோட்டப்புற பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
பொலநறுவ மாவட்டத்தில் தமிழ் பேசும் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மன்னாரில் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் பலி
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாம் வெறுக்கிறோம்
இனவாத அரசிற்கெதிராக இலங்கைத் தமிழர் சகல வழிகளிலும் போராடவேண்டியநேரம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசு துரித நடவடிக்கை
கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட செய்தி இணையத்தள புகைப்படப்பிடிப்பாளர் விடுதலை
நீர்கொழும்பு சந்தையில் திடீர் சோதனை பதிவு செய்யாத தராசுப்படிகளுடன் 35 பேர் கைது
கண்காணிப்பு குழுவின் பொருட்கள் ஏலம்
ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தில் நடந்த தவறால் இன்று பாரிய போராட்டத்திற்கு முகம் கொடுக்கிறோம்
யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் 300 பொதுமக்கள் சரணடைந்தனர்
`படையினரின் வளங்களை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி'
புத்தளம், ஆனமடுவவில் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த சுசில் பிரேம ஜயந்த பணிப்புரை
மஸ்கெலியாவில் 40 இலட்சம் ரூபா செலவில் பொது சுகாதார வைத்திய பணிமனை
`ஐ.தே.க.அரசாங்கத்தை அமைக்கும் போது மலையக மக்களுக்கு தனிப்பெரும் அமைச்சை உருவாக்கும்'
தலைவரின் தலைமையில் அனைவரும் அணிதிரண்டு தனியரசை நிறுவுவதே எமக்குள்ள ஒரே வழி
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக உடனடி மாற்றங்களை ஏற்படுத்த முடிவு
ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் மரணம்
தவறான தகவலால் முக்கிய பிரமுகருக்காக அரசு வெளியிடவிருந்த இரங்கல் அறிக்கை
கண்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு அதிகரிப்பு விண்ணப்ப படிவங்களால் பொதுமக்கள் சிரமம்
இரு வள்ளங்கள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மட்டு.நகரில் பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
`பயங்கரவாதிகள் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு எதையும் செய்யக் கூடிய நிலையில் சிங்களவரும் உள்ளனர்'
கண்டியில் திடீர் தேடுதல் 13 பேர் கைது
தாமரையிலை பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்
புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வீடு, வாகனம் தாக்கப்பட்டமைக்கு கண்டனத் தீர்மானம்
மலேசிய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com