Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
8 படையினர், 20 க்கு மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் உயிரிழப்பு
[11 - March - 2008] [Font Size - A - A - A]
வடக்கே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கடும் மோதல்களில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டதுடன் 21 படையினர் படுகாயமடைந்துள்ளதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இந்த மோதல்களில் 20க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டும் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் இலந்தைவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற மோதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் 12 படையினர் படுகாயமடைந்துமுள்ளனர்.

இங்கு இடம்பெற்ற அதிரடித் தாக்குதலில் புலிகளின் எட்டு பதுங்கு குழிகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.

மன்னார் பரப்பான்கண்டலில் முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற மோதலில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

அடம்பன் பகுதியில் நண்பகல் 12 மணியளவில் கடும் மோதல் நடைபெற்றது. இதில் மூன்று படையினர் படுகாயமடைந்தனர்.

மடுவுக்கு கிழக்கே முற்பகல் 11.15 மணியளவில் நடைபெற்ற கடும் மோதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் நான்கு படையினர் படுகாயமடைந்துமுள்ளனர்.

இதேநேரம், வவுனியா முள்ளிக்குளம் பகுதியிலும் யாழ். குடாநாட்டில் நாகர்கோவில் பகுதியிலும் நடைபெற்ற மோதல்களில் தலா ஒருவர் கொல்லப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.

இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் அதிகாலை முதல் நான்கு முனைகளில் படையினர் ஒரே நேரத்தில் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிகளை தாங்கள் முறியடித்து படையினருக்குப் பலத்த உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

சேத்துக்குளம் ஊடாக பாப்பாமோட்டைப் பகுதிக்கும் பரப்பான்கண்டல் பகுதியிலிருந்து காத்தான்குளம் நோக்கியும் பெரிய பண்டிவிரிச்சான் பகுதி நோக்கியும் மடுப்பகுதியிலிருந்து கீரிசுட்டான் பகுதி நோக்கியும் முன்னேற படையினர் மேற்கொண்ட முயற்சிகளே முறியடிக்கப்பட்டதாகப் புலிகள் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
வாக்களிக்கவிடாமல் தடுத்த காட்டு யானைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு
வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒருவர் பலி 4 மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயம்
கோரளைப்பற்று, ஏறாவூர் பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பின் போது பல்வேறு முறைகேடுகள்
8 படையினர், 20 க்கு மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் உயிரிழப்பு
3 ஆயிரம் குடும்பங்களை வலிகாமம் வடக்கில் உடனடியாக மீள் குடியேற்றுமாறு பணிப்பு
வடக்கு- கிழக்கில் இன்று டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்கமாட்டார்கள்
2005 நவம்பரில் செய்ததே நான் இழைத்த பெரும் பாவம்
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த துரித நடவடிக்கை
`உலக நாடுகளில் ஆசியநாட்டுப் பெண்களே பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள்'
சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி கல்முனைக் குடியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இறக்குவானை, சூரியகந்தையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு; பொலிஸ் காவலரண்கள் அமைக்க கோரிக்கை
அட்டம்பிட்டி வாகன விபத்தில் ஒருவர் பலி; ஐவர் படுகாயம்
ஊட்டியில் சுற்றுலா மையங்களை பார்வையிட்ட இலங்கை படை அதிகாரிகள்
உடல் வெப்பநிலை அதிகரிப்பு 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
எல்லராவ வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்
இலங்கைப் பெண்களின் திறமையை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மரணம்
ஷ்ரீலங்கா ரெலிக்கொம்மிலுள்ள தனது பங்கை ஜப்பான் என்.ரி.ரி. மலேசிய நிறுவனத்துக்கு விற்கமுடியும்
ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா
உலருணவு விநியோகத்தில் ஆறு மாத காலமாக தாமதம்
குடும்பஸ்தர், வாய்பேச முடியாதவர், சித்தசுவாதீனமற்றவர் கைதுகள் தொடர்பாக பிரதியமைச்சரிடம் முறையீடு
யுவதியை கடத்தியவர்கள் பொலிஸாரால் கைது
துப்பாக்கிச்சூட்டில் இரு புலிகள் பலி
கல்முனையில் மீனவர் சுட்டுக்கொலை அதிரடிப்படை வீரர் படுகாயம்
வருடப்பிறப்புக்கு முன்னதாக குறைந்த விலையில் காஸ்
அப்புத்தளையில் இராணுவத்தினர், பொலிஸார் திடீர் தேடுதல்; பத்துக்கும் மேற்பட்டோர் கைது
கிராமங்களைப் பாதுகாக்கவே சிவில் பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது
யாழ். மருத்துவபீட மாணவர்களுக்கு விடுதி அமைக்க காணி கொள்வனவு
அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் அக்கரப்பத்தனை பிரதேச மக்கள்
இத்தாலியில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவர்
இலங்கை இலக்கிய பேரவை விருதுக்கு விண்ணப்பம் கோரல்
தகுதி, அர்ப்பணிப்பு நிறைந்த அதிபரின் நிர்வாகத்திலேயே பாடசாலை சாதனை படைக்கும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் தான் சேமிப்பு பழக்கத்தில் அதிகம் ஈடுபடுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com