Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கோரளைப்பற்று, ஏறாவூர் பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பின் போது பல்வேறு முறைகேடுகள்
[11 - March - 2008] [Font Size - A - A - A]
* தேர்தல் ஆணையாளருக்கு மு.கா. முறைப்பாடு

மட்டக்களப்பிலிருந்து எம்.ஏ.எம். நிலாம்

மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச சபை ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைகளுக்கு நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் இடம்பெற்ற பல்வேறு முறைகேட்டு சம்பவங்கள் தொடர்பாக வாழைச்சேனை, ஏறாவூர் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் நாணயக்கார மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோரளைப்பற்று பிரதேச சபைக்கான வாக்களிப்பின் போது பல இடையூறுகள் இடம்பெற்றதாகவும் மொத்தமாக 8 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை தொடர்பில் பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் ஹஸன் அலி தெரிவித்தார்.

வாக்குச்சாவடிகளுக்கு கட்சியின் செயலாளர் என்ற அடிப்படையில் தனக்கு போக உரிமை இருந்த போதிலும் அரசாங்க அதிபர் பிரதித் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு போகவிடாமல் தடுத்ததோடு அமைச்சரவை அந்தஸ்தே இல்லாத அமைச்சர் அமீர் அலிக்கு மட்டும் அவரது ஆதரவாளர்கள் சகிதம் அப்பகுதிக்குச் செல்ல அனுமதித்துள்ளனர்.

நேற்று மாலை மூன்று மணிக்குப் பின்னர் வாக்களிப்பு நிலையத்துக்கு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், நேற்று அதிகாலை மூன்று மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கபூரின் இல்லத்துக்குச் சென்ற அமைச்சரின் ஆதரவாளர்கள் கபூரின் வீட்டின் மீது கிரனைட் குண்டு வீசித் தாக்கியதோடு அவரது பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயரத்னவும் காயமடைந்துள்ளார்.

நேற்று முற்பகல் நௌஷாத் என்ற வேட்பாளரின் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் அமீர் அலி நௌஷாதின் பாதுகாப்பு அதிகாரியான ரபீக்கைத் தாக்கியுள்ளார். இதனை முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற ரபீக்கை பொலிஸ் உயரதிகாரி கடுமையாக எச்சரித்து சீருடையை கழற்றுவதாக எச்சரித்துள்ளார்.

இவை குறித்து உடனடியாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாணயக்காரவிடம் முறையிடப்பட்டுள்ளது.

நேற்றைய தேர்தலின் போது கோரளைப் பற்றிலும் ஏறாவூர் பற்றிலுமே ஆளும் தரப்பினரால் அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை எனவும் மு.கா.செயலாளர் ஹஸன் அலி தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
வாக்களிக்கவிடாமல் தடுத்த காட்டு யானைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு
வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒருவர் பலி 4 மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயம்
கோரளைப்பற்று, ஏறாவூர் பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பின் போது பல்வேறு முறைகேடுகள்
8 படையினர், 20 க்கு மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் உயிரிழப்பு
3 ஆயிரம் குடும்பங்களை வலிகாமம் வடக்கில் உடனடியாக மீள் குடியேற்றுமாறு பணிப்பு
வடக்கு- கிழக்கில் இன்று டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்கமாட்டார்கள்
2005 நவம்பரில் செய்ததே நான் இழைத்த பெரும் பாவம்
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த துரித நடவடிக்கை
`உலக நாடுகளில் ஆசியநாட்டுப் பெண்களே பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள்'
சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி கல்முனைக் குடியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இறக்குவானை, சூரியகந்தையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு; பொலிஸ் காவலரண்கள் அமைக்க கோரிக்கை
அட்டம்பிட்டி வாகன விபத்தில் ஒருவர் பலி; ஐவர் படுகாயம்
ஊட்டியில் சுற்றுலா மையங்களை பார்வையிட்ட இலங்கை படை அதிகாரிகள்
உடல் வெப்பநிலை அதிகரிப்பு 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
எல்லராவ வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்
இலங்கைப் பெண்களின் திறமையை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மரணம்
ஷ்ரீலங்கா ரெலிக்கொம்மிலுள்ள தனது பங்கை ஜப்பான் என்.ரி.ரி. மலேசிய நிறுவனத்துக்கு விற்கமுடியும்
ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா
உலருணவு விநியோகத்தில் ஆறு மாத காலமாக தாமதம்
குடும்பஸ்தர், வாய்பேச முடியாதவர், சித்தசுவாதீனமற்றவர் கைதுகள் தொடர்பாக பிரதியமைச்சரிடம் முறையீடு
யுவதியை கடத்தியவர்கள் பொலிஸாரால் கைது
துப்பாக்கிச்சூட்டில் இரு புலிகள் பலி
கல்முனையில் மீனவர் சுட்டுக்கொலை அதிரடிப்படை வீரர் படுகாயம்
வருடப்பிறப்புக்கு முன்னதாக குறைந்த விலையில் காஸ்
அப்புத்தளையில் இராணுவத்தினர், பொலிஸார் திடீர் தேடுதல்; பத்துக்கும் மேற்பட்டோர் கைது
கிராமங்களைப் பாதுகாக்கவே சிவில் பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது
யாழ். மருத்துவபீட மாணவர்களுக்கு விடுதி அமைக்க காணி கொள்வனவு
அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் அக்கரப்பத்தனை பிரதேச மக்கள்
இத்தாலியில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவர்
இலங்கை இலக்கிய பேரவை விருதுக்கு விண்ணப்பம் கோரல்
தகுதி, அர்ப்பணிப்பு நிறைந்த அதிபரின் நிர்வாகத்திலேயே பாடசாலை சாதனை படைக்கும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் தான் சேமிப்பு பழக்கத்தில் அதிகம் ஈடுபடுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com