மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் சில கிராம மக்கள் வாக்களிக்கச் செல்ல முடியாதபடி காட்டு யானைகள் குறுக்கிட்டன. இதனால், அவர்கள் வாக்களிக்கச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சில கிராமங்களிலேயே யானைகளால் இத்தகைய இடையூறு ஏற்பட்டது. எனினும், பாதுகாப்புப் படையினர் உபகரணங்களைப் பயன்படுத்தி பலத்த ஒலி எழுப்பி யானைகளை விரட்டியடித்தனர். இதனையடுத்து மக்கள் அச்சமின்றி சென்று வாக்களிக்கக் கூடியதாக இருந்தது.
சுமார் 14 வருடங்களின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமார் 6 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.