Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகளில் 82% ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே
[12 - March - 2008] [Font Size - A - A - A]
* ஹக்கீம் மகிழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அங்குள்ள முஸ்லிம் வாக்காளர்களின் 82 சதவீதமான வாக்குகள் தமது கட்சிக்கு கிடைத்திருப்பதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தது.

இது தொடர்பாக கட்சி நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 4 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றிபெற்று முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப 7 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இது இப்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் பெரும் ஆதரவை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கயிருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இத்தேர்தலில் வாக்களித்த முஸ்லிம் வாக்காளர்களின் 81.9 சதவீதமான வாக்குகள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைத்துள்ளமை கட்சிக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.

நடந்து முடிந்த 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 70 ஆயிரத்து 477 ஆகும். இதில் மொத்த முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 339 ஆகும். இது மொத்த வாக்காளர் தொகையில் 10.84 வீதமாகும். இந்நிலையில், மேற்படி மொத்த முஸ்லிம் வாக்காளர்களில் 56 சதவீதமான 16 ஆயிரத்து 240 முஸ்லிம் வாக்காளர்கள் இத்தேர்தலின் போது வாக்களித்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அளிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகளான 16,240 வாக்குகளில் 13 ஆயிரத்து 301 வாக்குகள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைத்துள்ளது. இது 81.9 வீதமாகும்.

இந்த வெற்றியானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளையும் அதன் தேர்தல் வேட்பாளர்களையும் ஏற்றுக் கொண்டு செயற்பட்டிருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தேர்தல் நடவடிக்கைகளில் பொய்பிரசாரங்களுக்கும் வன்முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தேர்தலுக்கு முகம் கொடுத்து மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய வெற்றியைத் தேடித் தந்த எமது வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் பல்வேறு வகையில் இவ்வெற்றியை அடையச் செய்யும் முகமாக இரவு பகலாக பாடுபட்டு எமது கட்சி அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களுக்கும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
பத்திரிகையாளர் பலர் கைது செய்யப்பட்டு பல மணிநேரம் தடுத்துவைத்து விசாரணை
`சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சி' தேர்தல் முடிவை நிராகரித்தது ஐ.தே.க.
த.ம.வி.பு. சர்வகட்சிக்குழுவின் மாநாட்டில் எந்த நேரத்திலும் பங்கு பற்ற முடியும்; அரசு தெரிவிப்பு
முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகளில் 82% ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே
கிழக்கு மாகாண சபை வேட்புமனு கோரும் திகதியை மார்ச் 14க்கு முன் அறிவிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
தொடர்ந்து 3 நாட்களாக மன்னாரில் கடும்மோதல்
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க இந்தியா சகல உதவிகளையும் வழங்கும்
மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசாங்கம் முயற்சிக்கின்றதா?
நடேசனுடன் மற்றொரு சந்திப்பின் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொழும்பு திரும்பினர்
துப்பாக்கி சூட்டில் குடும்பஸ்தர் பலி
தினக்குரல் பிரதம ஆசிரியரின் தாயார் காலமானார்
நேரம் காலம் பார்க்காமல் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆசிரியர்களே இன்று தேவை
போலி நாணயத்தாள் தயாரிக்கும் உபகரணங்களுடன் மூவர் கைது
பொலிஸ், இராணுவம், சிவில் பாதுகாப்பு குழுக்கள் கதிர்காமத்தை சுற்றி வளைத்து தேடுதல்
தமிழர்களை தலைநகரில் அச்சமூட்டிவரும் வெள்ளைவானில் திரியும் ஆயுததாரிகள்
அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் கடும் மழை, இயல்புநிலை பாதிப்பு
குடியேற்றத்தின் உண்மையான நோக்கம் குறித்து மக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டியது கடப்பாடு
தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் நேற்றிரவு இருதரப்பும் கடும் ஷெல் வீச்சு
இலங்கை படைத்தளபதிகளை அழைத்ததை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்
இராணுவத் தளபதி யால விஜயம்
தஞ்சம் கோரிய 11 இலங்கை தமிழரை திருப்பி அனுப்பியது உக்ரேன் அரசு
இந்திய ஆளும் காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் கச்சதீவை திரும்பப்பெற பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
இம்மாத நடுப்பகுதியில் மின்கட்டண அதிகரிப்பு?
ஒரு வருடம் பணியாற்றமுன் இடமாற்றம் வழங்கினால் வட, கிழக்கு ஆஸ்பத்திரிகளை மூட வேண்டி நேரிடும்
வைத்தியசாலை கூரையின் மேல் ஏறி பெண் ஊழியர் உண்ணாவிரதப் போராட்டம்
கொட்டாஞ்சேனையில் கைதான குடும்பஸ்தரின் விடுதலை தொடர்பாக பிரதியமைச்சரிடம் முறையீடு
ஆங்கில போதனாசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டு சகலரும் பயன்பெற வழிவகுக்க வேண்டும்
`கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆக்கம், ஊக்கம் உதைபந்தாட்ட துறைக்கும் வழங்கப்பட வேண்டும்'
தோட்டப் பகுதிகளில் இந்து மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கவேண்டியது இளைஞர், யுவதிகளின் கடமையாகும்
தோட்டப்பகுதி சுகாதார சேவையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர துரித நடவடிக்கை
`தீவிரவாதியை விசாரிப்பது போலவே என்னை விசாரணை செய்தனர்'
பெண்களுக்கென வகுத்துரைக்கப்பட்டுள்ளவற்றையும் மனித உரிமைகளாக கவனத்திற் கொள்ள வேண்டும்
புத்தல பகுதியில் தொடரும் தாக்குதல்களால் கதிர்காமத்துக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com