மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.
இந்தத் தேர்தலானது தவறான முறையில் நடத்தப்பட்டிருப்பதாகவும் நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐ.தே.க. வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே கிரியெல்ல எம்.பி. இதனைக் கூறியுள்ளார்.
சர்வதேசத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் விதத்திலேயே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டைகள் அபகரிக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் ஆயிரம் ரூபாவுக்கு சில வாக்காளர் அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க. சாடியுள்ளது.