Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பத்திரிகையாளர் பலர் கைது செய்யப்பட்டு பல மணிநேரம் தடுத்துவைத்து விசாரணை
[12 - March - 2008] [Font Size - A - A - A]
* சுதந்திர ஊடக இயக்கம் விசனம்

இம்மாத முற்பகுதியில் அதிகளவான செய்தியாளர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதுடன், அவர்களில் சிலர் பல மணிநேரங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டமை தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது.

செய்திகளையும் விவரணக் கட்டுரைகளையும் வெளியிடும் .outreachsl.com என்னும் இணையத்தளத்தில் பணியாற்றும் அதிகளவான செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எந்தவித வலுவான காரணங்களுமின்றி ஈ.கே.வலிரி அச்சக உரிமையாளரும் எழுத்தாளருமான என்.ஜசிஹரனும் அவரது மனைவி வளர்மதியும் பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரது மடிக் கணினியும் (லப்டொப்) அச்சக உபகரணங்களும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஜசிஹரன் www.outreachsl.com இணையத்தளத்தின் எழுத்தாளரென்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏழாம் திகதி இவ் இணையத்தளத்தின் ஆசிரியரும் சுயாதீன செய்தியாளருமான ஜே.எஸ்.திசைநாயகம் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தினால் (ரி.ஐ.டி.) கைது செய்யப்பட்டார். காலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இவர் மாலையில் கைது செய்யப்படும் வரை குடும்பத்தினருக்கு எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை. இவரிடம் விசாரணை செய்யப்பட்ட விபரங்களை தெரிவிப்பதற்கு ரி.ஐ.டி. மறுத்துவிட்டதாக ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரரின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், அவசரகால விதிகளின் கீழ் 8 ஆம் திகதியிலிருந்து 30 நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இவ் இணையத்தளத்தின் மற்றொரு செய்தியாளரான கே.விஜயசிங்கவும் ஒளித்தொகுப்பாளரான உதயனும் ஏழாம், எட்டாம் திகதிகளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஏழாம் திகதி பிற் பகலில் சுதந்திர ஊடக இயக்கப் பேச்சாளரும் சரிநிகர் என்னும் தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான எஸ்.சிவகுமார் என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் வசந்தனை தேடிவந்த ரி.ஐ.டி. உத்தியோகத்தர்கள் அவர் அங்கு இல்லாமையால் அவரது உறவினர் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னர் 8 ஆம் திகதி காலை 9 மணியளவில் சிவகுமார் சுதந்திர ஊடக இயக்கத்துடன் ரி.ஐ.டி. அலுவலகத்திற்கு சமூகமளித்தார்.

எட்டாம் திகதி எஸ்.சிவகுமாரும் இவ் இணையத் தளத்தின் புகைப்படப்பிடிப்பாளரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், இவர்களிடம் நீதிக்குப் புறம்பான வழிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாதென ரி.ஐ.டி. அதிகாரிகள் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு உறுதியளித்திருந்தனர். இதன்படி 12 மணி நேர விசாரணைகளின் பின்னர் சிவகுமார் விடுவிக்கப்பட்டார்.

மக்களின் நலன்களுக்காக விசாரணைகளை மேற்கொள்ளும் உரிமை சட்ட அமுலாக்கல் அமைப்புகளுக்கு இருக்கிறதென்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளை, இக்கைதுகள் தொடர்பில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமெனவும் நாம் விரும்புகிறோம். கைது செய்யப்பட்டவர்களின் வாக்கமூலத்தை பதிவு செய்யும்போது அவர்களின் வழக்கறிஞர்களும் உடன் இருக்கும் உரிமையையும் கைது செய்யப்பட்டவர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள் என்பதை குடும்பத்தினருக்கு அறிவிக்கும் கடமையையும் சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டுமென நாம் கருதுகிறோம்.

ஆனால், இவ்விதிகள் அடிக்கடி மீறப்படுவதை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். அதனால் இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்து நீதிமன்ற சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டுமென வலியுறுத்துகிறோமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
பத்திரிகையாளர் பலர் கைது செய்யப்பட்டு பல மணிநேரம் தடுத்துவைத்து விசாரணை
`சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சி' தேர்தல் முடிவை நிராகரித்தது ஐ.தே.க.
த.ம.வி.பு. சர்வகட்சிக்குழுவின் மாநாட்டில் எந்த நேரத்திலும் பங்கு பற்ற முடியும்; அரசு தெரிவிப்பு
முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகளில் 82% ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே
கிழக்கு மாகாண சபை வேட்புமனு கோரும் திகதியை மார்ச் 14க்கு முன் அறிவிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
தொடர்ந்து 3 நாட்களாக மன்னாரில் கடும்மோதல்
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க இந்தியா சகல உதவிகளையும் வழங்கும்
மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசாங்கம் முயற்சிக்கின்றதா?
நடேசனுடன் மற்றொரு சந்திப்பின் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொழும்பு திரும்பினர்
துப்பாக்கி சூட்டில் குடும்பஸ்தர் பலி
தினக்குரல் பிரதம ஆசிரியரின் தாயார் காலமானார்
நேரம் காலம் பார்க்காமல் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆசிரியர்களே இன்று தேவை
போலி நாணயத்தாள் தயாரிக்கும் உபகரணங்களுடன் மூவர் கைது
பொலிஸ், இராணுவம், சிவில் பாதுகாப்பு குழுக்கள் கதிர்காமத்தை சுற்றி வளைத்து தேடுதல்
தமிழர்களை தலைநகரில் அச்சமூட்டிவரும் வெள்ளைவானில் திரியும் ஆயுததாரிகள்
அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் கடும் மழை, இயல்புநிலை பாதிப்பு
குடியேற்றத்தின் உண்மையான நோக்கம் குறித்து மக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டியது கடப்பாடு
தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் நேற்றிரவு இருதரப்பும் கடும் ஷெல் வீச்சு
இலங்கை படைத்தளபதிகளை அழைத்ததை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்
இராணுவத் தளபதி யால விஜயம்
தஞ்சம் கோரிய 11 இலங்கை தமிழரை திருப்பி அனுப்பியது உக்ரேன் அரசு
இந்திய ஆளும் காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் கச்சதீவை திரும்பப்பெற பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
இம்மாத நடுப்பகுதியில் மின்கட்டண அதிகரிப்பு?
ஒரு வருடம் பணியாற்றமுன் இடமாற்றம் வழங்கினால் வட, கிழக்கு ஆஸ்பத்திரிகளை மூட வேண்டி நேரிடும்
வைத்தியசாலை கூரையின் மேல் ஏறி பெண் ஊழியர் உண்ணாவிரதப் போராட்டம்
கொட்டாஞ்சேனையில் கைதான குடும்பஸ்தரின் விடுதலை தொடர்பாக பிரதியமைச்சரிடம் முறையீடு
ஆங்கில போதனாசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டு சகலரும் பயன்பெற வழிவகுக்க வேண்டும்
`கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆக்கம், ஊக்கம் உதைபந்தாட்ட துறைக்கும் வழங்கப்பட வேண்டும்'
தோட்டப் பகுதிகளில் இந்து மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கவேண்டியது இளைஞர், யுவதிகளின் கடமையாகும்
தோட்டப்பகுதி சுகாதார சேவையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர துரித நடவடிக்கை
`தீவிரவாதியை விசாரிப்பது போலவே என்னை விசாரணை செய்தனர்'
பெண்களுக்கென வகுத்துரைக்கப்பட்டுள்ளவற்றையும் மனித உரிமைகளாக கவனத்திற் கொள்ள வேண்டும்
புத்தல பகுதியில் தொடரும் தாக்குதல்களால் கதிர்காமத்துக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com