சமூக சேவைகளுக்காக மிகவும் பிரபல்யம் பெற்றுள்ள செலிங்கோ ஒன்றிணைக்கப்பட்ட ஸ்தாபனம் மீண்டும் ஒரு புதிய செயற்றிட்டத்தில் 500 பாடசாலைகளுக்கான அதிநவீன தொழில்நுட்பத்தினாலான கணினித் தொழில்நுட்ப கற்கைகளுக்கான அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ அதனை அங்குரார்ப்பணம் செய்வதையும் செலான் வங்கி ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான தேசமான்ய லலித் கொத்தலாவல மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரையும் இங்கு காண்கிறீர்கள்.
சக வாழ்வு மன்றத்தின் உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் வண. மடுல்வாவே சோபித தேரர், அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, டி.யூ.குணசேகர மற்றும் விக்டர் ஐவன், கலாநிதி குமார் ரூபசிங்க, எல்மோ பெரேரா, மகேன் தயானந்த, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.