Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`முற்று முழுதாக ஆயுத முனையில் வாக்களிப்பு' தேர்தல் செயலகம் முன் ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
[13 - March - 2008] [Font Size - A - A - A]
* கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாமென மகஜர்

எம்.ஏ.எம்.நிலாம்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் முற்று முழுதாக ஆயுத முனையில் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி தேர்தல் செயலகத்திற்கு முன் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் நடத்திய ஐ.தே.க. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டாமென வலியுறுத்தி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவிடம் மனுவொன்றையும் கையளித்திருக்கிறது.

எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ராஜகிரியவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

"அரச படைத்துப்பாக்கிகள், பிள்ளையான் குழு ஆயுதங்கள் மூலமாக ஜனநாயகத்துக்கு வேட்டு"

"தேர்தல் ஆணையாளரே இதுதான் நீதியான நேர்யைான தேர்தலா?"

"ஆயுத முனையில் ஜனநாயகத் தேர்தல் உலகில் வேறெங்கும் உண்டா?"

"வாக்கு கொள்ளை இன்னும் எத்தனை நடக்கப் போகின்றது" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.

காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்றது.

ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது;

"மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலில் என்ன நடக்கும் என்று நாம் எதிர்வு கூறியிருந்தோம். அது அப்படியே நடந்து விட்டது. ஆயுத முனையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஊழலும், மோசடியும் தாராளமாகவே இடம் பெற்றுள்ளன. அரச பயங்கரவாதம் மீண்டுமொரு தடவை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கக் கட்சியும் ஆயுத மேந்திய ஒரு குழுவும் ஒன்றாக கை கோர்த்துக் கொண்டு செயற்பட்டு அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றிக் கொண்டுள்ளது. தமிழ் ஆயுதக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர்கள் ஆயுதமேந்திய வண்ணமே தேர்தலை எதிர் கொண்டன. அரச தரப்பும் அரச படையினரின் பூரண ஒத்துழைப்புடன் களமிறங்கியிருந்தன.

வாக்களிப்பில் மக்கள் எதிர் பார்த்த அளவில் பங்கேற்கவில்லை என்பதை கண்காணிப்புக்குழுக்களும் சிவில் அமைப்புகளும் சுட்டிக் காட்டியுள்ள நிலையில் 56 வீதமானோர் வாக்களித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வாக்களிப்பு நிலையங்கள் வெறிச் சோடிக்கிடந்தன. இந்தநிலையில், வாக்குப்பெட்டிகளில் எப்படி வாக்குகள் விழுந்தன என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

கருணா அம்மானை அரசு தலையைத்தடவ நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு பிள்ளையான் குழுவைத் தனது கைக்குள் வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தி முடித்துள்ளது.

கருணா அம்மான் தனக்கு நேர்ந்தது என்னவென்பதைப் பிரிட்டிஷ் நீதிமன்றில் விளக்கிக்கூறியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் திருவிளையாடல்களையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தனது அணியுடன் சேர்ந்து போட்டியிட முன்வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரை பிள்ளையான் குழு கட்டாயப்படுத்தியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

பொலிஸார் மற்றும் படைத்தரப்பின் பூரண ஆதரவு பிள்ளையான் குழுவுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தவிர ஆயுதங்களைத் தமது விருப்பப்படி பாவிக்கவும் அவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடந்திருப்பதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஜனநாயக அரசியல் கட்சிகளால் அங்கு நடமாடவே முடியவில்லை. ஆயுதக்குழுவே மட்டக்களப்பில் அரசோச்சுகின்றது.

இந்தநிலையில், ஜனநாயக அரசியல் அங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தொடக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆயுதமுனையிலான ஜனநாயக தேர்தல் எதிர்காலத்தில் நாட்டில் சகல பகுதிகளிலும் தொடரப்போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனநாயகத்தை மதிக்கும் சக்திகளின் கைகளில் தங்கியுள்ளது. நேர்மையான சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்புகளையும் இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்கா, ரவிகருணாநாயக்க ஆகியோர் தேர்தல்கள் ஆணையாளரிடம் மட்டக்களப்பு கண்டன மகஜரொன்றைக் கையளித்தனர்.

Email this page Your Opinion Print this page
இலங்கையிலிருந்து பணிப் பெண்களை அனுப்புவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்
மட்டு. மாநகர சபையை வசமாக்க வேண்டிய தேவையால் த.ம.வி.பு.வுடன் அரசு கூட்டு
மன்னாரில் 3 இடங்களில் கடும் விமானத் தாக்குதல்
ஜனாதிபதியின் அனுதாப செய்தி
`முற்று முழுதாக ஆயுத முனையில் வாக்களிப்பு' தேர்தல் செயலகம் முன் ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
புத்தளம் இறால் மடுக்கிராமத்தில் இளம் தமிழ் தம்பதி சுட்டுக்கொலை
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2 பொலிஸார், ஊர்காவலர் இடைநிறுத்தம்
மட்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடு
இமாமுடனான சந்திப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரபாகரன்
நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வியூகம் வகுப்பதாக கிழக்கு மாகாண தேர்தல் அமையும்
மன்னார் வீதி புனரமைப்பு பணியிலீடுபடும் மூவர் கொழும்பிலிருந்து வந்த பொலிஸாரால் கைது
பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தில் குளவிகள் அட்டகாசம்; சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதி
புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியினை மேம்படுத்த பணிப்பாளர் நடவடிக்கை
பெரும்பான்மையினர் மத்தியில் வாழும் தமிழ் மக்களுக்கு படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம்
லொட்ஜில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஜீப்வண்டியில் வந்தோரால் கடத்தல்
யானை தாக்கியதால் 8 வயதுச் சிறுமி உயிரிழப்பு
துப்பாக்கிகளுடன் இளைஞர் கைது
4 ஆசிரியர்கள் திடீரென இடமாற்றப்பட்டதால் மாணவரின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பல பகுதிகள் வெள்ளத்தில்; போக்குவரத்து துண்டிப்பு
மட்டு. தேர்தல் குறித்து இன்று முக்கிய அறிக்கை
குடாநாட்டில் கோடை மழை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிப்பு
இரு நாள் விஜயமாக அஞ்சல் மா அதிபர் யாழ். குடாவுக்கு இன்று விஜயம்
மட்டு. மாநகர மேயராக பத்மினி தெரிவானார்
காஸா பகுதிக்கு இலங்கையிலிருந்து பொருட்களை சேகரித்து அனுப்ப ஏற்பாடு
றோயல் - தோமியன் கல்லூரிகளுக்கிடையே 129 ஆவது கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்
கலேவெல, தம்புள்ளையில் கடும் மழை நெல் அறுவடைகள் பெரும் பாதிப்பு
மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் விளையாட்டு வீரர்கள் அசௌகரியம்
17 ஆவது திருத்த சட்டமூலத்தை அமுல்படுத்த ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறது
ஏதாவதொரு தொழிற்பயிற்சியை பெண்களும் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக அவசியம்
5 வருடங்களுக்கு முன் காணாமல்போன குடும்பஸ்தர் எலும்புக்கூடாக மீட்பு
கொழும்பு மட்டக்குளியில் ஆசிரியர் கடத்தல் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறையீடு
15ஆவது சார்க் மாநாடு கண்டியிலிருந்து கொழும்பிற்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாட்டுக்கு இந்தியா உட்பட ஆசிய நாடுகள் பகிரங்க ஆதரவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com