பொரளை, ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தினக்குரலின் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தின் தாயாரின் பூதவுடலுக்கு மூத்த அரசியல்வாதியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதை காணலாம்.
இக்கிரிகொல்லாவ, சாலம்பபுரத்திற்கு அண்மையில் விஜயம் செய்த மீள்குடியேற்றம் மற்றும் அனர்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சர் ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதை இங்கு காணலாம்.
நியாயமற்ற முறையில் இடமாற்றம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலை ஊழியர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்றும் புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. வைத்தியசாலை கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்களை இங்கு காண்கிறீர்கள்.