Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sinhala news
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த யுனிசெவ் பணியாளருக்கு பதவி உயர்வு
[13 - March - 2008] [Font Size - A - A - A]
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் சேவை செய்யும் உத்தியோகத்தர்கள் எந்தவொரு கட்சிக்கோ அரசாங்கத்துக்கோ சார்பாகவோ எதிராகவோ செயற்படுவது சட்டப்படி கடுமையான சர்வதேசக் குற்றமாகும். ஆனால், சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெவ் அமைப்பு அதற்கெதிரான வகையில் செயற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஜூன் மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதைக் கண்டித்தும் அரசைக் குற்றம் சாட்டியும் ஆர்ப்பாட்டம் கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக நடத்தப்பட்டது. மேலும் மேற்படி கொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று கோரியும் நடத்தப்பட்ட இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கறுப்புத்துணியால் வாய் கட்டியவாறு பலர் கலந்து கொண்டனர். இதன்போது, இவ்வாறு வாய் கட்டியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட லாரா ஸ்கொற் (Lara Scott) எனப்படும் பெண் பணியாளருக்கு யுனிசெவ் தலைமையகத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவயின 9/3/2008

Email this page Your Opinion Print this page
சேர்பியாவைப் போன்று ஷ்ரீலங்காவையும் பிரிக்கும் நோர்வேயின் திட்டம்
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த யுனிசெவ் பணியாளருக்கு பதவி உயர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com