நேபாளப் பிரதமர் கிரிஜாபிரசாத் கொய்ராலா எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக முடிவு செய்துள்ளார்.
இந்தியாவில் பிறந்தவரான இவர், நேபாளத்தில் ஐந்தாவது முறையாக பிரதமர் பதவி வகிக்கிறார்.
தனது ஓய்வு குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நேபாளத்தில் எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நான் அரசிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன்.
புதிய தலைமுறையிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விடைபெறுவதற்குத் திட்டமிட்டுள்ளேன். அத்துடன், நடைபெறவுள்ள தேர்தலை எந்தவொரு சக்தியாலும் சீர்குலைக்க முடியாது.
மேலும் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய இந்த முக்கியமான தேர்தலை சீர் குலைப்பதற்கு மன்னர் ஞானேந்திராவின் ஆதரவாளர்கள் முயன்று வருகிறார்கள்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக தெராய் நகரிலுள்ள இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஊடுருவல் மற்றும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இந்திய அரசுடன் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மாதேவி மக்கள் அதிகமாக வாழும் பிராந்தியத்துக்கும் சுயாட்சி வழங்குவது தொடர்பாக மாதேவி இன மக்களின் பெரிய இயக்கத்துடன் அண்மையில் நேபாள அரசு ஒரு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடும் இந்த இன இயக்கத்தினருடன் உடனடிப் பேச்சுக்கள் எதுவும் கிடையாதென தெரிவித்தார்.