Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு மாகாண தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் மும்முரம்
[15 - March - 2008] [Font Size - A - A - A]
* ஐ.ம.சு.மு. முஸ்லிம் பங்காளிகள் மத்தியில் புகைச்சல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் குதிப்பதற்கான வியூகம் வகுப்பதில் கட்சிகள் மும்முரமாக நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் அதேசமயம் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் மத்தியில் அதிருப்தியும் புகைச்சலும் ஆரம்பமாகியுள்ளதாக அறியவருகிறது.

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளினால் உற்சாகமடைந்துள்ள அரச தரப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் ஆரம்பகட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதற்குப் பொறுப்பாக அமைச்சர்கள் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய கட்சிகளையும் இணைத்து விசாலமான கூட்டணியொன்றை அமைத்து களம் இறங்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் இதற்காக ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கிழக்குக்கு சென்று தொடர் சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திலேயே அரசின் அங்கம் வகிக்கும் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் கட்சிகளும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விசாலமான கூட்டணியை அமைப்பதற்கு ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து ஒருவரை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நுஆ, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் மத்தியில் அதிருப்தி தோன்றியுள்ளதாக அறியவருகிறது. இரண்டாவது பெரிய சனத்தொகையுடைய முஸ்லிம் மக்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் அதிருப்தி கொண்டுள்ளன.

வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவிலோ அல்லது தேர்தல் நடவடிக்கை குழுவிலோ ஒரு முஸ்லிம் கட்சிக்கும் இடமளிக்கப்படவில்லையென்பதே இக்கட்சிகளின் விசனமாக காணப்படுகின்றது.

இதனால் சினமடைந்துள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் அமைச்சர்கள் தமது ஆத்திரத்தை சிலரிடம் வெளிப்படுத்தியதாகவும் அறியவருகிறது.

மேலும், ஆளும்தரப்பானது ஹெல உறுமய மற்றும் சில தமிழ் கட்சிகளுடன் கூட்டுவைக்க தீர்மானித்துள்ளமையும் முஸ்லிம் கட்சிகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இக்கூட்டணியில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்த தேர்தல் உடன்படிக்கை மேற்கொள்ள விரைவில் இரு கட்சித் தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சி முக்கியஸ்தர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் இது தொடர்பாக நடைபெற்றுள்ளது.

அடுத்துவரும் சில தினங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான கூட்டணிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
குண்டு வெடிப்பு பீதியை பயன்படுத்தி உடமைகளை சூறையாடும் கும்பல்
பாராளுமன்றத் தெரிவு குழுவை நியமித்து மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் அறிவிப்பு ஏமாற்றுவித்தை
ரூபவாஹினி ஊழியர்கள் மீது தொடர்ந்து வன்முறை காடையரால் தாக்கப்பட்ட உதவி இயக்குநர் படுகாயம்
கிழக்கு மாகாண தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் மும்முரம்
மலையகப் பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை மண்சரிவு, வெள்ள அபாயம், இயல்பு நிலை பாதிப்பு
கிளிநொச்சிக்கு கிழக்கே விமானத் தாக்குதல்
பொரளையில் தலை, முல்லேரியாவில் உடல் இளைஞன் படுகொலை; பொலிஸார் விசாரணை
கொட்டாஞ்சேனையில் தமிழர் கடத்தப்பட்டார்
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் சந்திரிக்கா
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் முதல் முறையாக 2 சிங்களவர்கள் தெரிவு
மேல் மாகாண சபை ஆளுநரின் உத்தரவையடுத்து கொழும்பு மாநகர சபை ஆணையாளர் கட்டாய லீவில்
வவுனியா வன்னிப்பிரதேசங்களில் அடை மழை நெல் அறுவடை வேலைகள் பெரிதும் பாதிப்பு
ஐரோப்பிய, இலங்கை ஆணைக்குழுக்களின் ஏழாவது ஒன்றுகூடல் ஜூன் மாதத்தில்
பேரினவாத நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உரமூட்டவே அரசு கிழக்கில் தேர்தல்களை நடாத்துகின்றது
ஜயந்திபுர கொலை வழக்கில் இரு சகோதரர்களுக்கு மரண தண்டனை
பதுளையில் கடும் மழை; மண்சரிவு 80 குடியிருப்புக்களைச் சேர்ந்த 400 பேர் நிர்க்கதி
சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவச பஸ் பயண அனுமதிப்பத்திரம் வழங்கல்
மாத்தளை நகர தங்க நகை விற்பனை நிலையத்தில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை
வெள்ளவாயாவில் பஸ் பயணி ஒருவரிடமிருந்து பிஸ்ரலுக்கான ரவைகள் மீட்பு
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்
ஐரோப்பிய ஒன்றிய விஷேட பிரதிநிதிகளுடன் மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ எம்.பி. சந்திப்பு
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்
உதவி இயக்குநர் மீதான தாக்குதலுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்
அரசு பெறும் பாரிய கடனுக்கு கணக்கு இல்லை யுத்தத்தை காரணம் காட்டி தப்பிவிட முயற்சி
கொழும்பு கம்பன் கழக இசைவேள்வியில் டாக்டர் மகேஸ்வரன் புலமைப்பரிசில் பெறுவோர் விபரம்
`அனைத்து பெண்களின் உரிமைகளையும் தொடரும் யுத்தம் அழித்துக் கொண்டிருக்கிறது'
இந்திய வம்சாவளி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்
மலேசியத் தேர்தலில் சிறுபான்மையினரின் குரல் பலமாக ஒலித்திருப்பதாக மகிழ்ச்சி
தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும் நடவடிக்கைளும் நிச்சயமாக இல்லை
ஐ.ஓ.சி. க்கு வழங்கப்பட்ட 107 எரிபொருள் விற்பனை நிலையங்களை மீளப்பெறுவது நியாயமா?
கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு இலங்கை வங்கி கிளைகளுக்கு ஆளணி உதவியாளர் நியமனம்
`ஐ.தே.க. அரசுக்கெதிராக விமர்சனங்களை வெளியிட்டாலும் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாது'
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யும் போட்டியிடும்
முறைகேடான விதத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்து
வெளிநாட்டுக் கப்பல்களை அனுமதித்ததாலேயே இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com