Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ரூபவாஹினி ஊழியர்கள் மீது தொடர்ந்து வன்முறை காடையரால் தாக்கப்பட்ட உதவி இயக்குநர் படுகாயம்
[15 - March - 2008] [Font Size - A - A - A]
* செய்திகளை தவிர நேரடி நிகழ்ச்சிகள் நேற்று ஒளிபரப்பாகவில்லை

ரூபவாஹினி கூட்டுத்தாபன உதவி இயக்குநரும் (விநியோகம்) தொழிற்சங்கவாதியுமான ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வெல்லம்பிட்டி கொட்டிகாவத்தை பகுதியில் காடையர் கோஷ்டியொன்றால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

தொடர்ச்சியாக ரூபவாஹினி ஊழியர்கள் தாக்கப்பட்டு வருவதற்கெதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காததற்கும் அரசு இவ்விடயத்தில் மௌனம் சாதித்து வருவதற்கும் ஆட்சேபம் தெரிவித்து நேற்று ரூபவாஹினி ஒளிபரப்பில் செய்திகளைத் தவிர வேறெந்த நேரடி நிகழ்ச்சிகளும் ஒளிரப்பப்படவில்லை.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அமைச்சர் மேர்வின் சில்வா நுழைந்து பெரும் அட்டகாசம் செய்தபோது அவரும் அவருடன் சென்ற சகாக்களும் கூட்டுத்தாபன ஊழியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டனர்.

இந்த நிலையில், ரூபவாஹினி ஊழியர்களைப் பழிவாங்கும் நோக்கில் அதன் பின் ஊழியர்கள் பலத்த தாக்குதல்களுக்கிலக்காகி வருகின்றனர்.

இது வரை நான்கு ஊழியர்கள் தாக்கப்பட்ட நிலையில் நேற்றுக் கலை 6.30 மணியளவில் வெல்லம்பிட்டி கொட்டிகாவத்தை பஸ் நிலையத்தில் வைத்து, விநியோகப் பிரிவின் உதவி இயக்குநரான அநுரசிறிஹெட்டிகே காடையர் கோஸ்டியொன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இவர் பஸ் நிலையத்தில் நின்றபோது ஆட்டோ ஒன்றில் ஆயுதங்களுடன் வந்த நான்கு காடையர்கள் இவர் மீது கடுமையாகத் தாக்கியுள்ளனர். கூரிய இரும்புக் கம்பிகளால் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதில் கழுத்தின் பின்புறப் பகுதியிலும் கழுத்திலும் தாடைப் பகுதியிலும் பலத்த காயங்களேற்பட்டு உடலெங்கும் இரத்தம் வழிந்தோடியுள்ளது.

மிக மோசமான தாக்குதலுக்கிலக்காகி அவர் வீழ்ந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக ரூபவாஹினி ஊழியர்கள் தெரிவித்தனர்.

தலையிலும் கழுத்துப் புற பகுதியிலும் ஏற்பட்ட பலத்த காயங்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதாக தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்த ரூபவாஹினி ஊழியர்கள் உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்தனர். தங்கள் மீது தொடரும் தாக்குதல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதம் அளிக்கப்படும் வரை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து அலைவரிசைகளிலும் செய்திகளைத் தவிர வேறெந்த நேரடி நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படமாட்டாதென அறிவித்ததுடன் நேரடி ஒளிபரப்புகளையும் உடனடியாக நிறுத்தினர்.

முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளே நேற்று முழு நாளும் ஒளிபரப்பாகின.

இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்ததும் அனைத்து ஊடக அமைப்புகளதும் செய்தியாளர்களும் ஒளிப்படப் பிடிப்பாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்களும் அங்கு விரைந்து சென்ற போதும் உள்ளே செல்ல எவரும் அனுமதிக்கப்படவில்லை.

ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர் தொழிற்சங்க முக்கிய பிரமுகரான ஹெட்டிகே மீதான தாக்குதல் குறித்து ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதமளித்ததுடன் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறமாட்டாதெனவும் ஊழியர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படுமெனவும் உத்தரவாதம் வழங்கும் வரை தங்கள் எதிர்ப்பு நடவடிக்கை தொடருமெனவும் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில், அவசர அவசரமாக ஊழியர் தொழிற்சங்கத்தினரை அழைத்த ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

எனினும், தங்கள் கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அரசு உத்தரவாதம் வழங்கும் வரை தங்கள் எதிர்ப்புப் போராட்டம் தொடருமென ஊழியர் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

இதேநேரம், இந்தச் சம்பவம் குறித்து அனைத்து ஊடக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த அரசும் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
குண்டு வெடிப்பு பீதியை பயன்படுத்தி உடமைகளை சூறையாடும் கும்பல்
பாராளுமன்றத் தெரிவு குழுவை நியமித்து மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் அறிவிப்பு ஏமாற்றுவித்தை
ரூபவாஹினி ஊழியர்கள் மீது தொடர்ந்து வன்முறை காடையரால் தாக்கப்பட்ட உதவி இயக்குநர் படுகாயம்
கிழக்கு மாகாண தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் மும்முரம்
மலையகப் பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை மண்சரிவு, வெள்ள அபாயம், இயல்பு நிலை பாதிப்பு
கிளிநொச்சிக்கு கிழக்கே விமானத் தாக்குதல்
பொரளையில் தலை, முல்லேரியாவில் உடல் இளைஞன் படுகொலை; பொலிஸார் விசாரணை
கொட்டாஞ்சேனையில் தமிழர் கடத்தப்பட்டார்
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் சந்திரிக்கா
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் முதல் முறையாக 2 சிங்களவர்கள் தெரிவு
மேல் மாகாண சபை ஆளுநரின் உத்தரவையடுத்து கொழும்பு மாநகர சபை ஆணையாளர் கட்டாய லீவில்
வவுனியா வன்னிப்பிரதேசங்களில் அடை மழை நெல் அறுவடை வேலைகள் பெரிதும் பாதிப்பு
ஐரோப்பிய, இலங்கை ஆணைக்குழுக்களின் ஏழாவது ஒன்றுகூடல் ஜூன் மாதத்தில்
பேரினவாத நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உரமூட்டவே அரசு கிழக்கில் தேர்தல்களை நடாத்துகின்றது
ஜயந்திபுர கொலை வழக்கில் இரு சகோதரர்களுக்கு மரண தண்டனை
பதுளையில் கடும் மழை; மண்சரிவு 80 குடியிருப்புக்களைச் சேர்ந்த 400 பேர் நிர்க்கதி
சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவச பஸ் பயண அனுமதிப்பத்திரம் வழங்கல்
மாத்தளை நகர தங்க நகை விற்பனை நிலையத்தில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை
வெள்ளவாயாவில் பஸ் பயணி ஒருவரிடமிருந்து பிஸ்ரலுக்கான ரவைகள் மீட்பு
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்
ஐரோப்பிய ஒன்றிய விஷேட பிரதிநிதிகளுடன் மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ எம்.பி. சந்திப்பு
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்
உதவி இயக்குநர் மீதான தாக்குதலுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்
அரசு பெறும் பாரிய கடனுக்கு கணக்கு இல்லை யுத்தத்தை காரணம் காட்டி தப்பிவிட முயற்சி
கொழும்பு கம்பன் கழக இசைவேள்வியில் டாக்டர் மகேஸ்வரன் புலமைப்பரிசில் பெறுவோர் விபரம்
`அனைத்து பெண்களின் உரிமைகளையும் தொடரும் யுத்தம் அழித்துக் கொண்டிருக்கிறது'
இந்திய வம்சாவளி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்
மலேசியத் தேர்தலில் சிறுபான்மையினரின் குரல் பலமாக ஒலித்திருப்பதாக மகிழ்ச்சி
தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும் நடவடிக்கைளும் நிச்சயமாக இல்லை
ஐ.ஓ.சி. க்கு வழங்கப்பட்ட 107 எரிபொருள் விற்பனை நிலையங்களை மீளப்பெறுவது நியாயமா?
கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு இலங்கை வங்கி கிளைகளுக்கு ஆளணி உதவியாளர் நியமனம்
`ஐ.தே.க. அரசுக்கெதிராக விமர்சனங்களை வெளியிட்டாலும் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாது'
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யும் போட்டியிடும்
முறைகேடான விதத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்து
வெளிநாட்டுக் கப்பல்களை அனுமதித்ததாலேயே இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com