Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாராளுமன்றத் தெரிவு குழுவை நியமித்து மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் அறிவிப்பு ஏமாற்றுவித்தை
[15 - March - 2008] [Font Size - A - A - A]
* அரசின் யோசனைக்கு 3 கட்சிகள் கடும் எதிர்ப்பு

மனித உரிமை மீறல் குறித்து சர்வசே சமூகத்தினால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் நோக்குடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்து அதன் மூலம் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அரசின் இத்தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன கடுமையாக சாடியுள்ளதுடன், இத்தீர்மானமானது ஒரு ஏமாற்று வித்தையெனவும் குற்றம் சாட்டியுள்ளன.

உத்தேச பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது குறித்து அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறுகையில்;

"மனித உரிமை மீறல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அவசியத்தை வலியுறுத்தி ஆளும் கட்சி பிரதம கொரடாவிற்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளேன். சகல கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தெரிவுக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளோம்.

சர்வதேச பாராளுமன்ற ஒன்றியுமும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அவசியம் குறித்து எமக்கு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது" என்றார்.

எனினும், இதற்கு முற்றிலும் எதிர் மறையான கருத்துகளையே ஏனைய கட்சிகள் வெளியிட்டன.

மனோ கணேசன் எம்.பி.

தலைவர்- மேலக மக்கள் முன்னணி

"மனித உரிமை மீறல் குறித்து ஆராயும் பல கமிட்டிகளை நாங்கள் இதுவரை கண்டுள்ளோம். மகாநாம திலகரட்ன, பசுபதி என பலரையும் நாம் கண்டுள்ளோம். பகவதிகுழு வெளியேறக் காரணமாக இருந்த அரசாங்கம் இப்போது சார்க் நாடுகளை உள்ளடக்கிய விசாரணைக் குழுவை நியமிக்கப் போவதாக கூறுகிறது.

சர்வதேச சமூகம் ஐ.நா. கண்காணிப்பகம் இலங்கையில் அவசியமென வலியுறுத்தும் நிலையில் அண்மையில் ஜெனீவாவில் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தலை நிராகரித்தது. எனினும், பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது ஒரு ஏமாற்று நடவடிக்கை, ஒரு பூசிமெழுகும் செயலாகவே இதனை நோக்குகிறோம். பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்தும் விரைவில் முடிவெடுப்போம்" என்றார்.

என். ஷ்ரீகாந்தா எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

"இலங்கையில் மனித உரிமைகள் விவகாரத்தை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நிறுவப்பட வேண்டுமென்ற பிரேரணை சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கம் அதற்குத் தயாரில்லை. இதனால், ஒரு மாற்று ஏற்பாடாக பாராளுமன்ற தெரிவுக் குழுவை நிறுவி சர்வதேச சமூகத்தின் பிரேரணையை மழுங்கடிக்கவும் முறியடிக்கவும் அரசாங்கம் முயல்கிறது.

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களை மூடிமறைக்க எடுக்கப்படும் ஒரு தந்திரோபாயமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைக் கருதுகிறது" என்றார்.

திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி.

செயலாளர் ஐக்கிய தேசியக் கட்சி

" பாராளுமன்றத் தெரிவுக்குழு பற்றிய பூரண விபரங்கள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. இக்குழு அரசாங்கத்தை காப்பாற்றும் சூழ்ச்சிகர நடவடிக்கையில் ஈடுபடுவதை நாம் அனுமதியோம். இது பற்றி அதிகூடிய கவனத்தை செலுத்தவும் ஐ.தே.க. தயாராகவுள்ளது" என்றார்.

Email this page Your Opinion Print this page
குண்டு வெடிப்பு பீதியை பயன்படுத்தி உடமைகளை சூறையாடும் கும்பல்
பாராளுமன்றத் தெரிவு குழுவை நியமித்து மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் அறிவிப்பு ஏமாற்றுவித்தை
ரூபவாஹினி ஊழியர்கள் மீது தொடர்ந்து வன்முறை காடையரால் தாக்கப்பட்ட உதவி இயக்குநர் படுகாயம்
கிழக்கு மாகாண தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் மும்முரம்
மலையகப் பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை மண்சரிவு, வெள்ள அபாயம், இயல்பு நிலை பாதிப்பு
கிளிநொச்சிக்கு கிழக்கே விமானத் தாக்குதல்
பொரளையில் தலை, முல்லேரியாவில் உடல் இளைஞன் படுகொலை; பொலிஸார் விசாரணை
கொட்டாஞ்சேனையில் தமிழர் கடத்தப்பட்டார்
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் சந்திரிக்கா
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் முதல் முறையாக 2 சிங்களவர்கள் தெரிவு
மேல் மாகாண சபை ஆளுநரின் உத்தரவையடுத்து கொழும்பு மாநகர சபை ஆணையாளர் கட்டாய லீவில்
வவுனியா வன்னிப்பிரதேசங்களில் அடை மழை நெல் அறுவடை வேலைகள் பெரிதும் பாதிப்பு
ஐரோப்பிய, இலங்கை ஆணைக்குழுக்களின் ஏழாவது ஒன்றுகூடல் ஜூன் மாதத்தில்
பேரினவாத நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உரமூட்டவே அரசு கிழக்கில் தேர்தல்களை நடாத்துகின்றது
ஜயந்திபுர கொலை வழக்கில் இரு சகோதரர்களுக்கு மரண தண்டனை
பதுளையில் கடும் மழை; மண்சரிவு 80 குடியிருப்புக்களைச் சேர்ந்த 400 பேர் நிர்க்கதி
சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவச பஸ் பயண அனுமதிப்பத்திரம் வழங்கல்
மாத்தளை நகர தங்க நகை விற்பனை நிலையத்தில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை
வெள்ளவாயாவில் பஸ் பயணி ஒருவரிடமிருந்து பிஸ்ரலுக்கான ரவைகள் மீட்பு
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்
ஐரோப்பிய ஒன்றிய விஷேட பிரதிநிதிகளுடன் மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ எம்.பி. சந்திப்பு
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்
உதவி இயக்குநர் மீதான தாக்குதலுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்
அரசு பெறும் பாரிய கடனுக்கு கணக்கு இல்லை யுத்தத்தை காரணம் காட்டி தப்பிவிட முயற்சி
கொழும்பு கம்பன் கழக இசைவேள்வியில் டாக்டர் மகேஸ்வரன் புலமைப்பரிசில் பெறுவோர் விபரம்
`அனைத்து பெண்களின் உரிமைகளையும் தொடரும் யுத்தம் அழித்துக் கொண்டிருக்கிறது'
இந்திய வம்சாவளி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்
மலேசியத் தேர்தலில் சிறுபான்மையினரின் குரல் பலமாக ஒலித்திருப்பதாக மகிழ்ச்சி
தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும் நடவடிக்கைளும் நிச்சயமாக இல்லை
ஐ.ஓ.சி. க்கு வழங்கப்பட்ட 107 எரிபொருள் விற்பனை நிலையங்களை மீளப்பெறுவது நியாயமா?
கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு இலங்கை வங்கி கிளைகளுக்கு ஆளணி உதவியாளர் நியமனம்
`ஐ.தே.க. அரசுக்கெதிராக விமர்சனங்களை வெளியிட்டாலும் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாது'
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யும் போட்டியிடும்
முறைகேடான விதத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்து
வெளிநாட்டுக் கப்பல்களை அனுமதித்ததாலேயே இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com