கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் வீதியில் நேற்று சனிக்கிழமை காலை எக்ஸ்போ எயார், உள்ளூர் விமான சேவை நிறுவனத்தின் புதிய கிளை இல.12 இராமகிருஷ்ணன் தோட்டம் என்ற முகவரியில் திறந்துவைக்கப்பட்டது. முதல் விமானப் பயண சீட்டினை வீ.எஸ்.சிவசுப்பிரமணியம் எக்ஸ்போ எயார் விமான சேவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எச்.எல்.றிக்கீயினிடம் (H.L.RIKHYE) பெற்றுக்கொள்வதையும் பயணிகள், விமான சேவை பணியாளர்களிடம் பயணச் சீட்டினைக் கொள்வனவு செய்வதனையும் இங்கு காணலாம்.
இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ ஊழியத்தின் 30 ஆவது வருட சமாதான ஆசீர்வாத பெருவிழா கொழும்பு 7 ரேஸ்கோஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுவிஷேகி கலாநிதி எம்.ஆர்.இராஜேந்திரம் அம்மையார், சகோதரர் சி.வி.இராஜேந்திரம் அருட்செய்தி வழங்குவதையும் கலந்துகொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களையும் இங்கு காணலாம்.