Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பல்லாயிரக்கணக்கானோர் நிர்க்கதி
[17 - March - 2008] [Font Size - A - A - A]
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதால் பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதுடன் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், வத்தளை, நீர்கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் வீடுகள், பாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

இது குறித்து இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் என்.யூ.வெத ஆராய்ச்சி தகவல் தருகையில்;

"கடந்த 36 மணித்தியாலயத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கடும் மழையினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகங்கள் எமக்குத் தகவல் அனுப்பியுள்ளன.

நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரமல்லாது, சகல பிரதேசங்களுமே மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களை தற்போது சேகரித்து வருகிறோம்.

பாதிக்கப்பட்டவர்கள் பொதுவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மழை தொடர்ந்து பெய்து வருவதனால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சில பிரதேசங்களில் வெள்ள நீரை வழிந்தோடச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழையினால் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டமைக்கான தவல்கள் எதுவும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. தாழ் நிலப் பிரதேசத்து மக்களும், கரையோர மற்றும் ஆற்றங்கரையோர பிரதேச மக்களையும் விழிப்புடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோருகிறது" என்றார்.

இதேவேளை, கடும் மழையினால் பிர தேசங்கள் சிலவற்றில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்சார, தொலைபேசி கம்பங்கள் உடைந்து வயர்களும் அறுந்து விழுந்துள்ளன. அத்துடன், வெள்ளத்தினால் பாதைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இதேசமயம், நிவாரண நடவடிக்கைகளுக்காக பிரதேச செலயகங்களுக்கு நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் எம்.ஆர்.எம். ராசிக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படும். அதன் பின் ஒரு வாரத்திற்கு உலருணவு வழங்கப்படும்.

சேதமடைந்த வீடுகளை திருத்தியமைக்க எமது அமைச்சு உதவும். சேதங்கள் ரூபா 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவைகள் என்றால் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானிக்கபபட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
`பிரபாகரனை' பார்க்க ஜனாதிபதிக்கு விருப்பம்
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பல்லாயிரக்கணக்கானோர் நிர்க்கதி
வவுனியா பகுதியில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ அதிகாரி பலி
கிழக்கின் 3 மாவட்டங்களிலும் பெரு வெள்ளம்
ஆசிரியர்களுக்கான புதிய சம்பளத் திட்டத்தை தொழிற்சங்கங்கள் முழுமையாக நிராகரிப்பு
இந்தியாவை உடனடியாக தலையிட தமிழ் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கிண்ணியா பகுதியில் இளைஞன் சுட்டுக் கொலை
மன்னார் - தலைமன்னார் வீதியில் ரோந்து சென்ற பொலிஸார் மீது தாக்குதல்; ஒருவர் பலி
தினமும் சனநடமாட்டமுள்ள இடங்களில் கட்டவிழ்த்து விடப்படும் குண்டுப்புரளி
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தம்
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இன்று வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு
நீர்கொழும்பில் சனிக்கிழமை இரவு பெய்த மழை 16 கிராமசேவையாளர் பிரிவுகளில் வெள்ளம்
விடுதலைப் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களை அர்ப்பணித்தது கிழக்கு மக்கள்
கொள்ளை கோஷ்டியினரால் கடத்தப்பட்ட இளைஞன் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு
`மோசமடைந்துவரும் இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகச் செயற்பட வேண்டும்'
களனியிலுள்ள ஊடகவியலாளர்களின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் தேடுதல்
`ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்'
கொழும்பு சங்கமித்த மாவத்தையில் தங்கியிருந்த யாழ்.இளைஞர் ஆயுதபாணிகளால்
உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை 27 ஆயிரத்து 700 ரூபாவாக அதிகரிப்பு
யாழ்.மாவட்ட அனைத்து இலங்கை வங்கிக் கிளைகளும் ஞாயிறு முதல் கணினி வலைப்பின்னலில் இணைவு
சிக்குன்குன்யா நோயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை
பிரதி பொலிஸ்மா அதிபராக 10 பொலிஸ் அத்தியட்சர்களுக்கு பதவி உயர்வு
வட, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு இதுவரை இலவச பாடநூல்கள் முழுமையாக கிடைக்கவில்லை
மன்னார், வவுனியா மருத்துவர்கள் மதவாச்சியூடாக துரிதமாக பயணம் செய்ய புதிய நடைமுறை
வவுனியாவில் சனிக்கிழமை இரவு அடைமழை
பேராதனையில் விஷமிகள் சிலரால் சிங்களப் பாடசாலைக்கு தீவைப்பு
மகரகம ரயில் நிலைய வளாகத்தில் 7 கடைகள் தீக்கிரை
ஏப்ரல் இறுதி வரை மழை தொடரும் சாத்தியம்
கோணகும்புற வீதி விபத்தில் குடும்பப் பெண் மரணம்
காணாமல்போன 5 மீனவர்களும் மீட்பு
அதிக கட்சிகள் களம் இறங்கினால் வன்முறைகளும் அதிகரிக்கும் சாத்தியம்
இரு சடலங்கள் வன்னிக்கு அனுப்பிவைப்பு
இளம் குடும்பஸ்தரை காணவில்லையென முறையீடு
சீருடையில் சென்று இரு மாணவர்கள் கொள்ளை
சுற்றாடலை சுத்தமாக பேணத்தவறும் உள்ளூராட்சி மன்றங்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சகிப்புணர்வு,விட்டுக்கொடுப்பை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் சமாதானப்பேரணி
யாழ். மாவட்டத்தில் தொழில் பயிற்சி வழங்கக்கூடிய அடிப்படை தகுதியுடன் சாவகச்சேரி அறவழிப் போராட்டக்குழு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரி பரீட்சைகள் வவுனியாவிலும் நடைபெறும்
ஜனசுவய வேலைத்திட்டத்தின் கீழ் 7300 பெண்களுக்கு சுயதொழில் முயற்சி
`நியமன எம்.பி.பதவியை வழங்கும் வாக்குறுதியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிறைவேற்றவில்லை'
காசநோய் தடுப்பு தினத்தையொட்டி பல்வேறு திட்டங்கள் அமுலாகிறது
`புலிகளின் தலைவர் தொடர்பாக தெற்கில் பரவிய தகவல்களெல்லாம் பொய்யானவை'
அரசின் கபடநாடகத்தை அம்பலமாக்குவதற்காக தமிழ் கூட்டமைப்பு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது அவசியம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com