பங்களாதேஷில் தற்போது அமைக்கப்பட்டுள்ள காபந்து அரசு முறைகேடாக செயல்பட்டு வருகிறது என கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் தலைவர் ஜம்முரூதீன் சிர்கார் தெரிவித்தார்.
டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது;
"காபந்து அரச சட்ட விரோத அரசு அல்ல. ஆனால், நிர்வாகம் சரியில்லாமல் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. நிர்வாகத்தில் நிலவி வரும் ஒழுங்கின்மை காரணமாக பல்வேறு செயல்பாடுகளில் தோல்வியடைந்துள்ளது. அதை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
அரசியல் சட்டதிட்டத்தின்படி, காபந்து அரசு 90 நாட்களுக்கு தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஓராண்டாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. பக்ரூதீன் அகமது தலைமையிலான அரசு கடந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு முறையும் தேர்தலை ஒத்திப்போட்டு வருகிறது" என்றார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி பங்களாதேஷில் காபந்து அரசு அமைக்கப்பட்டது. தேர்தல் நடத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் வரை ஜம்முரூதீன் சிர்கார் பாராளுமன்ற தலைவராக நீடிப்பார்.