Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மட்டு.உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஐ.ம.சு.மு., த.ம.வி.பு. உறுப்பினர்கள் 72 பேர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
[19 - March - 2008] [Font Size - A - A - A]
-எம்.ஏ.எம்.நிலாம்-

மட்டக்களப்பு மாநகர சபையுடன் ஏனைய எட்டு பிரதேச சபைகளதும் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றின் 72 உறுப்பினர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் தெரிவான பிரதேச சபைகளின் 61 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்குத் தெரிவான 11 உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சுபவேளையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணத்தைச் செய்துகொண்டனர்.

மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலில் மாநகர சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது. அக்கட்சி 11 இடங்களைப் பெற்றுக்கொண்டது.

ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று, போர தீவுப்பற்று, மண்முனைப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை தென்எருவில்பற்று, கோரளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச சபைகளின் அதிகாரத்தை 61 உறுப்பினர்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டது.

இதைத்தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும் மீதமுள்ள இடங்கள் சுயாதீன குழுக்களாலும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றிய இரண்டு கட்சிகளதும் உறுப்பினர்கள் 72 பேர் மட்டுமே நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சுயேச்சைக் குழு உறுப்பினர்களும் நேற்றைய வைபவத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தை புலி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு ஜனநாயகத்தை மலரச் செய்தது போன்று மிக விரைவில் வடக்கையும் மீட்டெடுத்து அங்கும் தமிழ் மக்கள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும்.

வடக்கு, கிழக்கிலும் முழு நாட்டிலும் கூடிய விரைவில் துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றோம். நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை தோற்றுவிப்பதே அரசின் ஒரே நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, கரு ஜயசூரிய, ஜனக பண்டார தென்னக்கோன், சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, ரிஷாத் பதியுதீன், நஜீப் ஏ.மஜீத், அமீர் அலி, டி.எம்.ஜயரத்ன, ஜோன் செனவிரட்ன, கிழக்கு மாகாண ஆளுநர் மோகான் விஜேவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, 72 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மட்டக்களப்பிலிருந்து கடும் பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் இன்று அல்லது நாளை மட்டக்களப்புக்கு பாதுகாப்புடன் திருப்பி கூட்டிச் செல்லப்படுவர் எனத் தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பு நிலைவரம்; இராணுவத்தளபதி அமெரிக்கத்தூதுவருக்கு விளக்கமளிப்பு
மின்னல் தாக்கி 3 இளைஞர்கள் பலி
தள்ளாடி முகாம் மீது நீண்ட நேரம் தொடர்ந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்
மட்டு.உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஐ.ம.சு.மு., த.ம.வி.பு. உறுப்பினர்கள் 72 பேர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் கவலையளிக்கும் நிலையிலுள்ளது
இலங்கை பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஒரு போதும் சாத்தியப்படமாட்டாது
பிரான்ஸ் உள்ளூராட்சி தேர்தலில் 12 தமிழர்கள் வெற்றி
யுத்தத்தில் வெற்றிகொள்வது பெரிய விடயமல்ல பிரதான பிரச்சினைக்கு தீர்வு காண்பதே கேள்விக்குறி
மொனராகலையில் தமிழ் இளைஞன் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்
தமிழகத்தில் புலிகள் தளம் அமைத்து இருப்பதாக நாராயணன் கூறவில்லை
1 ரூபாவால் சிகரெட் விலை அதிகரிப்பு அரசுக்கு 150 கோடி ரூபா வருமானம்
மகேஸ்வரன் கொலை மார்ச் 27 விசாரணை
பூநகரி மீது கடும் ஷெல் தாக்குதல் ஒருவர் பலி; மாணவன் படுகாயம்
சாட்சியமளிப்பதற்காக நான் கொல்லப்படலாம் நீதி கிடைக்க வேண்டுமென்பதற்காக பயப்படவில்லை
மன்னாரில் படையினரின் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு; 4 பேர் பலி
இலங்கைத் தமிழர் மீதான இராணுவ நடவடிக்கை அதிகரித்த போதும் இந்தியா மௌனம் காப்பதேன்?
களிமோட்டை பகுதியில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி
ரூபவாஹினி ஊழியரின் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை மேர்வினிடம் ஒப்படைத்திருந்தால் சிறப்பாக செய்திருப்பார்
சுதந்திரக் கட்சியை சீர்குலைக்க ரணிலும் சந்திரிகாவும் முயற்சி
விமர்சனங்களால் அவப்பெயரை தேடாத அரசியல்வாதியாக வாழ்ந்தவர் அநுரா
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
கதிர்காமம் ஆலயம் அருகில் வெள்ளை நாகபாம்பு
2 இலட்சத்து 20 ஆயிரம் டொலர் பெறுமதியான பயங்கரவாதத்திற்கு எதிரான உபகரணங்கள்
ஹெப்பிட்டிகொலாவ -மணலாறுக்கிடையில் குண்டுதுளைக்காத தகடுகள் பொருத்திய பஸ்கள்
ஹந்தானை மலை உச்சியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
கொழும்பு - புத்தளம் வீதியில் திடீர் வாகன சோதனை
ஊடகவியலாளரை அடக்கி ஒடுக்க வேண்டிய தேவை அரசிற்கில்லை
3 தமிழ்க்கட்சி பிரதிநிதிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் சந்திப்பு
இ. போ. ச. ஊழியர்களுக்கு கையடக்க தொலைபேசிகள்
கட்டாக்காலி ஆடு, மாடுகளின் தொல்லை ஏறாவூரில் அதிகரித்துள்ளதாக விசனம்
இலங்கை - அமெரிக்க உறவில் பெரும் விரிசல் ஏற்படும் நிலை
`கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் மக்களை ஏமாற்றும் செப்படி வித்தை'
`வரதட்சணை கொடுமையை ஒழித்துக்கட்டுவதற்கு சமூகரீதியாக ஒன்றிணைந்து போராட வேண்டும்'
அரசியல் தலைமைத்துவம் சொந்த இடத்தில் பிறந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்
மக்களின் நலனை கருத்திற்கொள்ளாத அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட தலைமைகளின் செயற்பாடுகளே தொடரும் கொடூர யுத்தத்திற்கு காரணம்
பதுளை மாவட்டத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com