Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பண்டிவிரிச்சான் பகுதி மோதலில் 11 படையினர் பலி; பலர் காயம்
[02 - March - 2008] [Font Size - A - A - A]
*புலிகள் தெரிவிப்பு

மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கடும் சமரில் 11 படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டிவிரிச்சான் பகுதியில் தங்களின் நிலையங்கள் சிலவற்றை அதிகாலை நடைபெற்ற மோதலில் படையினர் கைப்பற்றியதாகவும் பின்னர் தாங்கள் அப்பகுதியில் அதிரடித் தாக்குதலை நடத்தி அந்த இடங்களை மீளக் கைப்பற்றியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

அதிகாலை 5 மணிமுதல் 6.30 மணி வரை இந்த உக்கிர சமர் நடைபெற்றதாகவும் இதில் 11 படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கொல்லப்பட்ட மூன்று படையினரின் சடலங்களை கைப்பற்றுவதற்காக படையினர் கடுமையாக மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், அன்று பிற்பகல் 2 மணியளவில் முள்ளிக்குளம் பகுதியில் ஆழ ஊடுருவும் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் வசமிருந்து இரு கிளைமோர்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

வியாழக்கிழமையும் முள்ளிக்குளம் பகுதியில் கடும் மோதல் நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினருடன் 45 நிமிட நேரம் கடும் மோதல் நடைபெற்றதில் படையினர் தங்கள் முன்னேற்ற முயற்சியை கைவிட்டு பழைய நிலைக்குத் திரும்பியதாகவும் புலிகள் தெரிவித்தனர்.

அன்று பண்டிவிரிச்சான் பகுதியிலும் கடும் சமர் நடைபெற்றுள்ளது.

Email this page Your Opinion Print this page
இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கொழும்பு தீவிரம்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மனித உரிமை மீறல் தவிர்க்க முடியாதென இலங்கை கூறுவதை ஏற்கமுடியாது
தற்கொலைக்குண்டுதாரி வவுனியாவை சேர்ந்தவர்?
மட்டக்களப்பு தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி
பண்டிவிரிச்சான் பகுதி மோதலில் 11 படையினர் பலி; பலர் காயம்
கொள்ளையருக்கும் அடைக்கலம் கொடுப்போருக்கும் கடும் தண்டனை; வவுனியா நீதிபதி எச்சரிக்கை
2 தமிழர்களிடம் பணம், உடைமைகள் கோட்டை ரயில் நிலையத்தில் சூறை
பிரிட்டனுக்கு செல்வதற்கு இனிமேல் `புள்ளிகள்' தேவை
மாரவில மகாவெவயில் கிளைமோர் குண்டு மீட்பு
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் குறித்து பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் உறவினர்கள் முறையீடு
ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வு நாளை ஜெனீவா நகரில் ஆரம்பம்
பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்
இந்திய கடற்படையினரால் கைதான 21 மீனவர்கள் இன்று அழைத்து வரப்படுவர்
மத்தியகிழக்கு நாடுகளுக்கான சேவைகளை விஸ்தரிக்க ஸ்ரீலங்கா விமானசேவை தீர்மானம்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடத்த அரசு திட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 60 பெண்களுக்கு தையல் இயந்திரம் அன்பளிப்பு
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி தயாரத்ன
பாலையூற்று கொலை வழக்கில் எதிரிக்கு பத்துவருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு
இரவு உணவில் நச்சுத் தன்மை 45 பேர் ஆஸ்பத்திரியில்
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை
வவுனியாவில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டதாக உறவினர் குற்றச்சாட்டு
மாணவர்குழுக்களுக்கிடையே மோதல்; ஒருவர் ஆபத்தான நிலையில்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com