கொழும்பில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கியொன்றில் தனக்குள்ள கணக்கை கொழும்பிலுள்ள அரச வங்கிக்கு மாற்ற விரும்பினார். ஆகவே, கொழும்பு வங்கிக்குச் சென்று உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தனது விருப்பத்தை இதற்குப் பொறுப்பான உயரதிகாரியான பெண்மணியிடம் தெரிவித்தார்.
இந்த வாடிக்கையாளர் முதலில் தமிழில் சொன்னார். அந்த அதிகாரிக்குப் புரியவில்லை. பின்னர் ஆங்கிலத்தில் தனது நோக்கத்தை தெரிவித்தார். அதுவும் அவருக்குப் புரியவில்லை.
அந்த அதிகாரி சிங்களத்தில் ஏதோ கூற, இவருக்கு அது புரியவில்லை. எனவே, அந்த அதிகாரி, அங்கிருந்த லிகிதர் ஒருவரை அழைத்து மொழிபெயர்க்கச் சொன்னார்.
சிறிது நேரத்தில் வேறு சிலரும் தங்கள் அலுவல்கள் நிமித்தம் அங்கு வந்து ஆங்கிலத்தில் பேசியபோது, அந்த அதிகாரி மீண்டும் லிகிதரை அழைத்து மொழிபெயர்க்கச் சொல்லி விடயத்தை அறிந்துகொண்டார்.
இப்படி நடந்துகொண்டிருக்கையில் சில வாடிக்கையாளர்கள் உயரதிகாரியிடம் வராமல் நேராக லிகிதரிடமே சென்று தங்களின் தேவையைத் தெரிவித்தார்கள்.