Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரச தொலைக்காட்சி இராணுவ மயமாகுவதாக உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றச்சாட்டு
[21 - March - 2008] [Font Size - A - A - A]
* திரிபுபடுத்தப்பட்ட பொய்; நிராகரிக்கிறார் ஊடக அமைச்சர் யாப்பா

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை அரச தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்வகிக்க நியமித்திருப்பது பல வருடங்களாக இடம்பெறாததொரு நடவடிக்கையெனவும் இது ஊடகத்துறையை இராணுவ மயமாக்குவதற்கான அறிகுறியென்றும் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனை அரசாங்கம் திரித்துக் கூறப்படும் பொய்யென நிராகரித்திருப்பதுடன் தொலைக்காட்சி நிறுவன முகாமைத்துவ பலவீனத்தை சீர்படுத்த முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சுனில் சில்வா உதவுவாரெனத் தெரிவித்திருக்கிறது. ஆனால், கடந்த 20 வருடங்களாக தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இராணுவ அதிகாரியும் பொறுப்பாக இருந்ததை நாங்கள் பார்க்கவில்லை. இது நாட்டை இராணுவமயமாக்குவதன் ஓரங்கமாகும். இது அரசாங்கம் தயார்படுத்துவதன் ஒரு பகுதியென்று கூறமுடியும்.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை அவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென சுதந்திர ஊடக இயக்கப் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய ராய்ட்டருக்கு நேற்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொலைக்காட்சி நிறுவனம் இராணுவமயமாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் புனையப்படும் பொய்யென ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனமொன்றை எவ்வாறு இராணுவமயப்படுத்த முடியும்? அவர் (சுனில் சில்வா) ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாக இருந்தாலும் சிறந்ததொரு நிர்வாகியாவார் . அத்துடன் நிர்வாகத்தைப் பலப்படுத்த இராணுவம் அவர்களுக்கு உதவக்கூடும் என்று அமைச்சர் யாப்பா ராய்ட்டருக்குத் தெரிவித்திருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
ஆப்கானின் பிரதான சிறைச்சாலை இராணுவத்தினரால் மூடப்பட்டது
நிலையான சமாதானத்தை காணவேண்டுமென்ற ஆர்தரின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்றும்
முன்னாள் இராணுவ அதிகாரியின் பொறுப்பில் ரூபவாஹினி நிர்வாகம்
அரச தொலைக்காட்சி இராணுவ மயமாகுவதாக உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றச்சாட்டு
பாரிய கூட்டணிக்கு ஐ.ம.சு.வு.க்கு 10 கட்சிகள் இதுவரை ஆதரவு
கிழக்கில் அதிரடிப்படையை வாபஸ் பெறுவதன் மூலம் மற்றொரு வாக்கு கொள்ளைக்கு தயாராகிறது அரசு
மதவாச்சி காட்டினூடாக மன்னாருக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சி
பொலிஸ் சேவையில் அதிரடி மாற்றங்கள் 14 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம்
வடபகுதியில் தொடர்ந்து கடும் மோதல்
மாகாண சபை தேர்தல் அறிவிப்பால் மட்டக்களப்பில் தீவிர பாதுகாப்பு
தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு தினத்தில் தீர்மானம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மையளிக்கும் விதத்திலேயே முடிவுகள் அமையும்
ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து குற்றவாளிகள் தப்பினாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப முடியாது
கிழக்கு மாகாண தேர்தல் குறித்து கூட்டமைப்பு இன்றே முடிவெடுக்கும்
அம்பாறையில் நடைபெற்ற தாக்குதல்களில் ஒரு அதிரடிப்படை வீரர் பலி; 6 பேர் காயம்
இடதுசாரிகள் 3 தமிழ் கட்சிகளுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக சந்திப்பு
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடமேயுள்ளது
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பிரதம இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
குவைத் செல்ல வவுனியாவிலிருந்து கொழும்புக்கு வந்த 3 யுவதிகளும் முகவர் நிலையப் பெண்ணும் கைது
காலக்கெடு முடிவதற்கு முன்னரே சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு வெளியேறியமை வருத்தத்திற்குரியது
வாகன விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பு
மெய்ப்பொருளின் அனுபவம் பக்தி தத்துவஞானியின் அனுபவம் சத்தியம்
சிலாபத்தில் திடீர் சோதனை 36 பேர் பொலிஸாரால் கைது
காட்டு யானைகளின் தொல்லை அம்பாறையில் அதிகரிப்பு
கடும் மழையினால் தெல்தோட்டை பாலம் சேதம்
கடத்தப்பட்டவரை விடுவிக்க 2 இலட்சம் ரூபா கப்பம் கற்பிட்டி கடற்படை அதிகாரிக்கும் தொடர்பு?
மாத்தளையில் நேற்று ஐஸ்கட்டி மழை
தொடரும் அடைமழையால் ஆலையடிவேம்பு மரக்கறிச் செய்கையாளர்கள் பாதிப்பு
தமிழ் பாடசாலை இல்லாததால் உக்குவளையில் கல்வி, கலாசாரம் சீரழிவு
பல்கலைக்கழக அனுமதியின் போது இடம் பெயர்ந்தோரையும் கணிப்பிடுமாறு கோரிக்கை
சமாதானம் மலர வேண்டுமென்ற கிளார்க்கின் இறுதி ஆசையை நிறைவேற்ற பாடுபடுவோம்
கெலிஓயா நகரிலிருந்து பூவெலிக்கடை செல்லும் பஸ் சேவை சீரின்மையால் பயணிகள் பெரும் சிரமம்
கிராமசேவகர் இன்மையால் களுதாவளை மக்கள் அவதி
மாத்தளை நகரில் சாப்பு சட்டத்தை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பசறை பலநோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையிலிருந்து காலாவதியான அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு
69 ஆண்டுகளாக செயற்படுத்தப்பட்டு வரும் கல்விக்கொள்கை விரைவில் மாற்றப்படும்
மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே வங்கிகளின் இலக்கு
கொழும்பு மாவட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் புது வடிவம் பெற வேண்டும்
யுத்தத்தின் மத்தியிலும் நாட்டில் அபிவிருத்தி 2010 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்போம்
சமூகத்தின் அனைத்து கட்டுமானங்களிலும் பெண்கள் நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையே காணப்படுகிறது
அப்புத்தளை தம்பேதன்னையில் காணாமற்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com