Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நிலையான சமாதானத்தை காணவேண்டுமென்ற ஆர்தரின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்றும்
[21 - March - 2008] [Font Size - A - A - A]
* அனுதாப செய்தியில் ஜனாதிபதி ராஜபக்ஷ

ஆர்தர் சி கிளார்க்கின் முக்கியமான மூன்று விருப்பங்களில் ஒன்றான இலங்கையில் நிலையான சமாதானத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தனது சக்திக்கு உட்பட்ட சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானியும் விஞ்ஞான புனைகதை எழுத்தாளருமான ஆர்தர் சி கிளார்க்கின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் ஆர்தர் சி கிளார்க்கின் இந்த விருப்பமே சகல இலங்கையர்களினதும் விருப்பம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அனுதாப செய்தியில் ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது;

வெளிநாட்டில் பிறந்து இலங்கையை தனது இல்லமாக வரித்துக் கொண்ட மிகவும் புகழ்பெற்றவரான ஆர்தர் சி கிளார்க்கின் மறைவையிட்டு நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.

1956 தொடக்கம் இலங்கையில் வாழ்ந்த ஆர்தர் சி கிளார்க், நாட்டுக்கு புத்தி ஜீவித்தனம், கலாசாரம், அறிவியல் துறைகளில் இலங்கையின் அபிவிருத்திக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அதேசமயம் அவருடைய விஞ்ஞானத்துறை ஆராய்ச்சியினதும் எழுத்துத்துறை படைப்பும் உலகளாவிய ரீதியில் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது.

அவர் இந்த நாட்டுக்கு ஆற்றிய பணிகளால் இலங்கை மக்கள் அவர் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தனர். விசேடமாக இயற்கை வளங்களையும் சுற்றாடலையும் பாதுகாப்பது தொடர்பாக அவர் மிகுந்த முயற்சியுடன் செயற்பட்ட விதம் மக்களைப் பெரிதும் ஈர்த்திருந்தது. இன்று மிக முக்கியமான விடயமாகியுள்ள காலநிலை மாற்றம் குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

2004 இல் கடல்கோள் அனர்த்தம் இடம்பெற்றதை தொடர்ந்து உடனடி நிவாரணம் தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் கடல்கோள் எச்சரிக்கை முறைமையின் தேவை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்தை திருப்ப மேற்கொண்ட செயற்பாடும் எப்போதுமே நினைவில் நீடித்திருக்கக் கூடியவையாகும்.

எழுத்தாளர், தூர நோக்குடையவர், விண்வெளி ஆய்வின் முன்னோடி, செய்மதி தொடர்பாடல்களின் கர்த்தா, உன்னதமான மனிதாபிமானி, விலங்குகளில் அன்பு கொண்டவர் ஆகிய உயர்ந்த தன்மைகளை கொண்டவராகிய ஆர்தர் சி கிளார்க் இலங்கையின் தனித்துவமான பிரஜை என்பதையிட்டு நாம் எல்லோரும் பெருமைப்படுகின்றோம்.

சில மாதங்களுக்கு முன்பு தனது 90 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய ஆர்தர் சி கிளார்க் மூன்று முக்கியமான விருப்பங்களை வெளியிட்டிருந்தார். அவற்றில் ஒன்று சாத்தியமான அளவுக்கு விரைவாக இலங்கையில் நீடித்த சமாதானம் தோன்றுவதை பார்க்க வேண்டும் என்பதாகும்.

இந்த துயரமான வேளையில் அவருடைய மறைவால் உலகம் அடைந்திருக்கும் கவலையில் இலங்கையும் இணைந்து கொள்கிறது.

அதேவேளை, அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற எனது அரசாங்கம் தனது சக்திக்குட்பட்ட வகையில் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமென உறுதியளிக்கிறேன். இதுவே, சகல இலங்கையரினதும் விருப்பமாகும்.

Email this page Your Opinion Print this page
ஆப்கானின் பிரதான சிறைச்சாலை இராணுவத்தினரால் மூடப்பட்டது
நிலையான சமாதானத்தை காணவேண்டுமென்ற ஆர்தரின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்றும்
முன்னாள் இராணுவ அதிகாரியின் பொறுப்பில் ரூபவாஹினி நிர்வாகம்
அரச தொலைக்காட்சி இராணுவ மயமாகுவதாக உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றச்சாட்டு
பாரிய கூட்டணிக்கு ஐ.ம.சு.வு.க்கு 10 கட்சிகள் இதுவரை ஆதரவு
கிழக்கில் அதிரடிப்படையை வாபஸ் பெறுவதன் மூலம் மற்றொரு வாக்கு கொள்ளைக்கு தயாராகிறது அரசு
மதவாச்சி காட்டினூடாக மன்னாருக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சி
பொலிஸ் சேவையில் அதிரடி மாற்றங்கள் 14 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம்
வடபகுதியில் தொடர்ந்து கடும் மோதல்
மாகாண சபை தேர்தல் அறிவிப்பால் மட்டக்களப்பில் தீவிர பாதுகாப்பு
தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு தினத்தில் தீர்மானம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மையளிக்கும் விதத்திலேயே முடிவுகள் அமையும்
ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து குற்றவாளிகள் தப்பினாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப முடியாது
கிழக்கு மாகாண தேர்தல் குறித்து கூட்டமைப்பு இன்றே முடிவெடுக்கும்
அம்பாறையில் நடைபெற்ற தாக்குதல்களில் ஒரு அதிரடிப்படை வீரர் பலி; 6 பேர் காயம்
இடதுசாரிகள் 3 தமிழ் கட்சிகளுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக சந்திப்பு
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடமேயுள்ளது
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பிரதம இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
குவைத் செல்ல வவுனியாவிலிருந்து கொழும்புக்கு வந்த 3 யுவதிகளும் முகவர் நிலையப் பெண்ணும் கைது
காலக்கெடு முடிவதற்கு முன்னரே சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு வெளியேறியமை வருத்தத்திற்குரியது
வாகன விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பு
மெய்ப்பொருளின் அனுபவம் பக்தி தத்துவஞானியின் அனுபவம் சத்தியம்
சிலாபத்தில் திடீர் சோதனை 36 பேர் பொலிஸாரால் கைது
காட்டு யானைகளின் தொல்லை அம்பாறையில் அதிகரிப்பு
கடும் மழையினால் தெல்தோட்டை பாலம் சேதம்
கடத்தப்பட்டவரை விடுவிக்க 2 இலட்சம் ரூபா கப்பம் கற்பிட்டி கடற்படை அதிகாரிக்கும் தொடர்பு?
மாத்தளையில் நேற்று ஐஸ்கட்டி மழை
தொடரும் அடைமழையால் ஆலையடிவேம்பு மரக்கறிச் செய்கையாளர்கள் பாதிப்பு
தமிழ் பாடசாலை இல்லாததால் உக்குவளையில் கல்வி, கலாசாரம் சீரழிவு
பல்கலைக்கழக அனுமதியின் போது இடம் பெயர்ந்தோரையும் கணிப்பிடுமாறு கோரிக்கை
சமாதானம் மலர வேண்டுமென்ற கிளார்க்கின் இறுதி ஆசையை நிறைவேற்ற பாடுபடுவோம்
கெலிஓயா நகரிலிருந்து பூவெலிக்கடை செல்லும் பஸ் சேவை சீரின்மையால் பயணிகள் பெரும் சிரமம்
கிராமசேவகர் இன்மையால் களுதாவளை மக்கள் அவதி
மாத்தளை நகரில் சாப்பு சட்டத்தை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பசறை பலநோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையிலிருந்து காலாவதியான அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு
69 ஆண்டுகளாக செயற்படுத்தப்பட்டு வரும் கல்விக்கொள்கை விரைவில் மாற்றப்படும்
மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே வங்கிகளின் இலக்கு
கொழும்பு மாவட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் புது வடிவம் பெற வேண்டும்
யுத்தத்தின் மத்தியிலும் நாட்டில் அபிவிருத்தி 2010 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்போம்
சமூகத்தின் அனைத்து கட்டுமானங்களிலும் பெண்கள் நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையே காணப்படுகிறது
அப்புத்தளை தம்பேதன்னையில் காணாமற்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com