ஆப்கானிஸ்தானின் பிரதான சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து இராணுவத்தினர் அச் சிறைச்சாலையை மூடியுள்ளனர்.
1970 களில் தலைநகர் காபூலின் எல்லைப்புறத்தில் அமைக்கப்பட்ட புல்-ஈ- சார்ஹி என்னும் இந்த மிகப் பெரிய சிறைச்சாலையிலிருந்து துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிது.
அத்துடன் இச் சிறைச்சாலையின் ஒரு பகுதியை கைதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதுடன் இரண்டு படையினரை பணயக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்- ஹைடா மற்றும் தலிபான் சந்தேக நபர்களையும் அபாயகரமான குற்றவாளிகளையும் அடைப்பற்கு இச் சிறைச் சாலை பயன்படுத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கான் படையினருக்கும் சிறைக்கைதிகளுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் தற்போது தீவிரமடைந்திருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சிறைச்சாலையைச் சுற்றி அதிகளவான பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கைதிகள், அதிகரிகளுக்கெதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கையடக்கத் தொலைபேசிகளின் மூலமாக பி.பி.சி.யுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ள கைதிகள் தம்மில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாம் இருபடையினரை பிடித்து வைத்திருப்பதாகவும் இந்த சர்ச்சையை தீர்ப்பதற்கான மத்தியஸ்தரை அனுப்பாவிடில் அவர்கள் இருவரையும் கொன்றுவிடப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
ஆனால்,அவர்கள் படையினரை தடுத்து வைத்திருப்பதை உறுதிப்படுவதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லாமலிருப்பதாக அங்குள்ள நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் ஆப்கான் அரசிடமிருந்து எவ்வித தகல்களும் இதுவரை வெளியிடப்படாத போதும் சிறைச்சாலை மீது படை நடவடிக்கையொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு அசைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்சிறைச்சாலைக்கு விஜம் மேற்கொண்ட ஆப்கான் எம்.பி. ஒருவர் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.