வடக்கே கடும் மழை பெய்துவரும் நிலையில் மோதல்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் யாழ்.குடா நாட்டில் தொடர்ந்தும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த மோதல்களில் தங்கள் தரப்பில் இரு படையினர் கொல்லப்பட்டும் ஆறு படையினர் காயமடைந்துள்ளதாகக் கூறும் படைத்தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
யாழ்.குடாவில் முகமாலையிலும் வவுனியாவில் மாமடு, மேற்கு ஓமந்தை, விளாத்திகுளம், பாலமோட்டை, பண்டிவிரிச்சான் பகுதிகளில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
மன்னாரில் மாந்தை மேற்கு, மன்னார்- பூநகரி வீதியில் 17 ஆவது மைல்கள் பகுதியில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
மணலாறில் ஜனகபுர பகுதியிலும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.