அனைவர் மீதும் கருணைகாட்டுகின்ற உயிர்த்தெழுந்த தினம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல சகல இன மக்களுக்கும் விசேட செய்தியைக் கூறும் நன்னாளாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உயிர்த் தெழுந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இயேசுநாதர் மரணித்து உயிர்த்தெழுந்ததன் மூலம் தனது தெய்வ சக்தியை உறுதிப்படுத்தியதோடு, அதன் மூலம் மரணத்தை வெற்றிகொண்டு மனித இனத்திற்கு மரணத்தின் பிடிக்கு அப்பால் செல்லும் பாதையை காட்டியுள்ளார்.
அனைவர் மீதும் கருணை காட்டும் செய்தியைக் கூறுகின்ற கிறிஸ்தவ மதத்தினூடாக மனித வாழ்வில் ஏற்படுகின்ற புத்தெழுச்சியைக் குறிக்கும் வகையில் உயிர்த்தெழுந்த தினம் இன, மத, மொழி, குல, கோத்திர ரீதியாக வேறுபட்டுள்ள மனித சமூக்திற்கு மன்னிப்பளித்தல், புரிந்துணர்வு, சகவாழ்வு போன்ற சிறந்த பாதைகளைக் காட்டிக் கொடுக்கின்றது.
இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இந்த உயிர்த்தெழுந்த தினம் தெய்வ ஆசி நிறைந்த, சமாதானத்தையும் நட்புறவையும் கொண்டுவரும் தினமொன்றாக அமைய நான் பிரார்த்திக்கிறேன்.