Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பேராதனையில் நேற்று தீவிர தேடுதல் பயணிகள், வாகனங்கள் சோதனை
[24 - March - 2008] [Font Size - A - A - A]
பேராதனை பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக் கிழமை மிகப்பெரியளவில் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பேராதனை ரயில் நிலையம், ஹிந்தகல, பெனிதெனிய, ஹெலி ஓயா ஆகிய பகுதிகளிலேயே நேற்றுக் காலை முதல் மாலை வரை இந்த நடவடிக்கையை பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டிருந்தனர்.

நூற்றுக்கணக்கான வாகனங்களும், ஆயிரக்கணக்கான மக்களும் இந்தச் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதை காணமுடிந்தது.

பேராதனை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்களும், வெளியிடங்களில் இருந்து வந்த ரயில்களும் பலத்த சோதனையிடப்பட்டதுடன், பயணிகளின் பொதிகளும் தேசிய அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்பட்டன. பலர் விசாரணை செய்யப்பட்டனர்.

குறிப்பாக தமிழர்கள் மீது தீவிர சோதனைகளும், விசாரணைகளும் இடம்பெற்றன.

அட்டன், நாவலப்பிட்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் இருந்து கண்டிப்பகுதிக்கு வந்து கொண்டிருந்த சகல வாகனங்களும் ஹெலிஓயாவில் நிறுத்தப்பட்டு, அவற்றில் பயணம் செய்தவர்கள் அனைவரும் வெளியே இறக்கப்பட்டு சோதிக்கப்பட்டனர்.

இந்த வாகனங்கள் மிகத் தீவிரமாக சோதனையிடப்பட்டன. வாகனங்களில் இருந்த பொருட்களும் துருவித்துருவி சோதனையிடப்பட்டன.

இதேபோல பெனிதெனிய, ஹிந்தகல பகுதிகளிலும் வாகனங்களும், பொதுமக்களும் சோதனையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது 28 வயது தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

பேராதனையில் இது போன்ற தேடுதல் நடவடிக்கையும் சோதனைகளும் இதற்கு முன்னர் ஒருபோதும் இடம் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
கொழும்பிலிருந்து சென்ற கப்பல் கொல்கத்தா துறைமுகத்துடன் மோதியது
ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து இலங்கை வெளியேற்றப்படும் நிலையில்
பேராதனையில் நேற்று தீவிர தேடுதல் பயணிகள், வாகனங்கள் சோதனை
வத்தேகமயில் சுற்றிவளைப்பு 15 பேர் பொலிஸாரால் கைது
மணலாறு, யாழ்.குடா மோதலில் 4 படையினர் பலி; 9 பேர் படுகாயம்
கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு வேட்பாளர் தெரிவில் ஐ.தே.க.
வெள்ளவத்தையில் ரயில் மோதியதில் பதுளையை சேர்ந்த தமிழ் யுவதி பலி
கொழும்பில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் சோதனையில் பஸ் பயணிகள் பெரும் அவதி
புத்தகாயாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் 24 பேர் காயம்
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கமும் தனியாரும் இணைந்து விஷேட திட்டம்
நிவித்திகலை விபத்துகளில் ஒருவர் பலி, மூவர் காயம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகள் பலர் பங்கேற்பு
மக்களின் பாதுகாவலனாக விளங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் வியாபாரம் நடத்துகின்றன
கையடக்கத் தொலைபேசி அழைப்பு மன்னாரில் பல மணிநேரம் துண்டிப்பு
10 புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைப்பு
வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதி செய்வதை அடுத்தவருடம் முதல் கட்டுப்படுத்த அரசு தீர்மானம்
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறும்
வஸ்கமுவ பூங்காவில் இடம்பெற்ற இரட்டைக்கொலை பிரதான சூத்திரதாரி மாவனல்லையில் கைது
பெண்களுடன் தவறாக எவரும் நடக்க முயலவில்லை எழுத்துமூலம் தருமாறு பொலிஸார் வற்புறுத்தல்
கதிர்காமம் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி வழிபாடு
மதவாச்சி ஆஸ்பத்திரியில் மட்டும் தினமும் 3000 நோயாளிகளுக்கு சிறுநீரக சிகிச்சை
இந்தியாவுக்கு அடிபணிந்தே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்களுக்கு ஜனநாயக உரிமை வழங்கும் நோக்கம் எதுவுமில்லை
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் இளைஞர் தற்கொலை
ஷிராந்தி ராஜபக்ஷவின் தாயார் காலமானார்
வெள்ளவத்தையில் ஆட்டோ சாரதியான தமிழ் குடும்பஸ்தரைக் காணவில்லை
கோலாலம்பூரில் இலங்கை தமிழ் இளைஞரும் மற்றொருவரும் இனந்தெரியாதோரால் கொலை
தமிழ்நாட்டு மின்சாரத்தை பெறுவதற்காக இலங்கை குழு விரைவில் இந்தியா பயணம்
லியாம் பொக்ஸ் இலங்கை வருகிறார்
அமைச்சர் செனவிரட்னவின் ஆதரவாளர்கள் இலங்கை மின்சார சபை ஊழியர்களாக நியமனம்
பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாதுகாப்பு விழிப்புக்குழுக்கள் உதவ வேண்டும்
குண்டுவெடிப்பையடுத்து சீருடையில் வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களைத் தாக்கி தரையில் வீழ்த்தி பலதடவைகள் சுட்டனர்
நாவலப்பிட்டியிலுள்ள மூவின மக்களும் போற்றும் வகையில் சேவை செய்வதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன்
வெளிநாடு சென்று பட்டம் பெறும் டாக்டர்கள் நாடு திரும்பி சேவை செய்ய மறுக்கின்றனர்
தொழிலாளர்களின் பொறுப்பற்ற செயலால் குடாநாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கடும் மழையின் மத்தியிலும் நள்ளிரவு ஆராதனையில் மக்கள்
தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கும்பாபிஷேகம் ஏப்ரலில்
வெவஸ்சை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் வெடிப்பு
கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்து பொலிஸ் அதிகாரியின் மகன் படுகாயம்
கல்வியே ஒரு தேசத்தின் மிகப் பெரும் செல்வம் அதனை வளர்ப்பவர்கள் போற்றப்பட வேண்டும்
முஸ்லிம் சமூகத்தின் கல்வி அபிவிருத்திக்காக அரசியலுக்கு அப்பால் நின்று பாடுபடவேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com