Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு; வான்பாயும் குளங்கள் அநுராதபுரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின
[26 - March - 2008] [Font Size - A - A - A]
*மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

அநுராதபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் கடுமையான மழையின் காரணமாக குளங்கள் பல வான் பாய ஆரம்பித்துள்ளன. மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதால் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நாச்சியாதீவு குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மல்வத்து ஓயா பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சாலியபுர, பானியங்கடவல, பூவரசன்குளம் ஆகிய இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவு ஒன்றிலிருந்து ஒரு செக்கனில் 4200 கன அடி நீர் பாய்வதாக நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எம்.ஜீ.எம்.கலீல் தெரிவித்தார்.

கலாவாவியின் இரு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து செக்கனுக்கு 11454 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் தற்போது கலாவாவியில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் ஏக்கர் தண்ணீர் இருப்பதாகவும் கலாவெவ பகுதிக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொருளியலாளர் எம்.ஆர்.பண்டார தெரிவித்தார். கலாவாவியின் கொள்ளவை விட 3341 ஏக்கர் அடி நீர் மேலதிகமாக வந்து சேர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியாவிற்கு கடந்த எட்டு வருடகாலத்தின் பின்னர் வான் பாயும் அளவுக்கு நீர் வந்து சேர்ந்துள்ளது. விலாச்சிகுளம், பசவக்குளம், திசாவாவி, மஹகனந்தர வாவி, ஹுருலுவாவி, பதவியாக்குளம் என்பனவும் வான்பாயும் நிலையில் உள்ளன.

ரஜரட்ட பகுதியில் எதிர்பாராத விதமாக பெய்துவரும் மழையின் காரணமாக நெல் அறுவடை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால் நெல்லின் விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

அநுராதபுர மாவட்டத்தில் குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாலும் மல்வத்து ஓயா பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளதாலும் குளங்களின் அருகே வசிப்பவர்களும் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன பொறியியலாளர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
உடையார் கட்டுக்குளத்தில் விமானத் தாக்குதல்
புல்மோட்டை கடலில் மோதல்
முகத்துவாரம் வீடொன்றிலிருந்து வெடிபொருள், கருவிகள் மீட்பு
அல்ஹைதா , தலிபான்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு தமிழர்களுக்கு தனிநாட்டை இந்தியா ஒருபோதும் அனுமதியாது
காச நோயால் தினமும் 4 ஆயிரம் பேர் மரணம்
இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியில் நாடு
மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை
கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் குதிக்க ஐ.தே.க. தீர்மானம்
கிழக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதென்ற நம்பிக்கையே அதிரடிப்படை அகற்றப்பட்டதற்குக் காரணம்
கப்பப் பணத்தை பெற வந்தபோது மடக்கிப் பிடித்த பொலிஸார்
10 புலி உறுப்பினர்களின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி. யூடாக வன்னிக்கு
ஐ.சி.ஆர்.சி.யின் வதிவிடப் பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
அநுராதபுரம் முகாம் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் சிப்பாய் உயிரிழப்பு
`அக்‌ஷன் பாம்' அலுவலக நுழைவாயில் அருகே சென்று உள்ளே பார்த்தபோது சடலங்கள் கிடப்பதைக் கண்டேன்
"மா விலை அதிகரிக்க பிறிமா அனுமதி கோரவில்லை"
20 நாட்களில் 501 புலிகள் பலி
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாமென்கிறது ஐ.நா.
இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பதற்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்
பூசா முகாமிலிருந்து நால்வர் விடுதலை வெலிக்கடை சிறைக்கு மேலும் 10 பேர்
யாழ். நுண்கலைப் பீட மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் சரண்
திடீரென ஏற்பட்ட வயிற்றுளைவால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பலத்த மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கக்கோரிக்கை
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு ஏப்ரல் 9 வரை விண்ணப்பிக்கலாம்
கடும் மழையால் பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை
கண்டி நகர வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
பயண அனுமதி வழங்க புதிய நடைமுறை அமுல்
பொலிஸ் பிரிவுகளை மக்கள் இனங்காணும் வகையில் விபரங்களடங்கிய பெயர்ப் பலகைகள்
பொதுமகனை மோதிக்கொன்ற இராணுவ கவச வாகனம்; ரூபா 5 இலட்சம் பிணையில் விடுவிப்பு
மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிட கருத்தரங்கு
வவுணதீவு, காரைதீவு பிரதேசங்களில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் மக்கள்
மலேசியாவில் இறந்த தமிழ் இளைஞனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு
வட - கிழக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு தமிழ்மொழி பயிற்சி வழங்க நடவடிக்கை
மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு; வான்பாயும் குளங்கள் அநுராதபுரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com