Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பலத்த மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கக்கோரிக்கை
[26 - March - 2008] [Font Size - A - A - A]
*அமைச்சர் மைத்திரிபாலவுக்கு சிவசக்தி ஆனந்தன் கடிதம்

அகால மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா , மன்னார் ,முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டினை வழங்குமாறு விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திங்கட்கிழமை அனுப்பிய அவசரத் தொலைநகல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தற்போது நாட்டில் நிலவிவரும் பருவம் தப்பிய மழை வெள்ளத்தால் வவுனியா மாவட்டத்தில் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட நெல் வயல்கள் முற்றாக அழிவடைந்துள்ளதோடு உப உணவுப் பயிர்கள் , சிறு தானியங்கள் ,மரக்கறி வகைகள், வெங்காயம் , 25 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசி மரங்கள் போன்றனவும் அழிவடைந்துள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 12,500 ஏக்கர் வயல்நிலத்தில் செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்கள் முற்றாக நாசமடைந்துள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் 896 ஏக்கர் நெற்பயிரும் 156 ஏக்கர் மரக்கறிச்செய்கையும் 406 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட ஏனைய பயிருமாக மொத்தம் 1,500 ஏக்கர் விளைச்சல் முற்று முழுதாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச்செய்கை நிலங்களும் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளும் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு அவை குறித்த காலத்தில் அறுவடை செய்யப்பட முடியாமல் அழிவடைந்தமையால் வடபகுதி விவசாயிகள் சொல்லொணாப் பொருளாதார நஷ்டத்தில் முடங்கிப் போயுள்ளார்கள்.

ஏற்கனவே, இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்த அனர்த்தங்களால் தமது விளைச்சல் நிலங்கள், வீடுகளை இழந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இப்பிரதேச விவசாயிகள் தமது அன்றாட அவலங்களையும் தாண்டி கையிருப்பினையும் கடன் பெற்ற பணத்தினையும் கொண்டு பயிர்ச்செய்கையினை மிகவும் பிரயாசையுடனும் பலத்த குண்டு வீச்சின் மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரவகைகளின் வழங்கலில் பெரும் தடையினை எதிர்கொண்டுள்ள இவர்கள் மதவாச்சி சோதனைச்சாவடியூடாக நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை அம்பாறை போன்ற பிற மாவட்டங்களிலிருந்து எடுத்து வருவதில் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்படுத்தப்பட்ட தாமதத்தினாலும் குறிப்பாக மன்னார் மாவட்ட விவசாயிகளின் 12,500 ஏக்கர் நெற்செய்கை உரிய காலத்தில் அறுவடை செய்யப்பட முடியாமற் போயிற்று.

போரினால் விளைந்த அனர்த்தத்துடன் இப்போது நிகழ்ந்துள்ள இயற்கை அனர்த்தமும் சேர்ந்து வடபகுதி விவசாயிகளினை மீண்டும் எழமுடியாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கவைத்துள்ளது.

எனவே, இவர்கட்கும் தென்னிலங்கையில் அடைமழையால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போன்று நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவினை வழங்க உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு உதவுமாறு கோரப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
உடையார் கட்டுக்குளத்தில் விமானத் தாக்குதல்
புல்மோட்டை கடலில் மோதல்
முகத்துவாரம் வீடொன்றிலிருந்து வெடிபொருள், கருவிகள் மீட்பு
அல்ஹைதா , தலிபான்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு தமிழர்களுக்கு தனிநாட்டை இந்தியா ஒருபோதும் அனுமதியாது
காச நோயால் தினமும் 4 ஆயிரம் பேர் மரணம்
இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியில் நாடு
மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை
கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் குதிக்க ஐ.தே.க. தீர்மானம்
கிழக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதென்ற நம்பிக்கையே அதிரடிப்படை அகற்றப்பட்டதற்குக் காரணம்
கப்பப் பணத்தை பெற வந்தபோது மடக்கிப் பிடித்த பொலிஸார்
10 புலி உறுப்பினர்களின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி. யூடாக வன்னிக்கு
ஐ.சி.ஆர்.சி.யின் வதிவிடப் பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
அநுராதபுரம் முகாம் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் சிப்பாய் உயிரிழப்பு
`அக்‌ஷன் பாம்' அலுவலக நுழைவாயில் அருகே சென்று உள்ளே பார்த்தபோது சடலங்கள் கிடப்பதைக் கண்டேன்
"மா விலை அதிகரிக்க பிறிமா அனுமதி கோரவில்லை"
20 நாட்களில் 501 புலிகள் பலி
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாமென்கிறது ஐ.நா.
இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பதற்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்
பூசா முகாமிலிருந்து நால்வர் விடுதலை வெலிக்கடை சிறைக்கு மேலும் 10 பேர்
யாழ். நுண்கலைப் பீட மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் சரண்
திடீரென ஏற்பட்ட வயிற்றுளைவால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பலத்த மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கக்கோரிக்கை
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு ஏப்ரல் 9 வரை விண்ணப்பிக்கலாம்
கடும் மழையால் பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை
கண்டி நகர வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
பயண அனுமதி வழங்க புதிய நடைமுறை அமுல்
பொலிஸ் பிரிவுகளை மக்கள் இனங்காணும் வகையில் விபரங்களடங்கிய பெயர்ப் பலகைகள்
பொதுமகனை மோதிக்கொன்ற இராணுவ கவச வாகனம்; ரூபா 5 இலட்சம் பிணையில் விடுவிப்பு
மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிட கருத்தரங்கு
வவுணதீவு, காரைதீவு பிரதேசங்களில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் மக்கள்
மலேசியாவில் இறந்த தமிழ் இளைஞனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு
வட - கிழக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு தமிழ்மொழி பயிற்சி வழங்க நடவடிக்கை
மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு; வான்பாயும் குளங்கள் அநுராதபுரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com