Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பதற்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்
[26 - March - 2008] [Font Size - A - A - A]
* விஜய டி. ராஜேந்தர் தெரிவிப்பு; தி.மு.க அரசு மீதும் குற்றச் சாட்டு

சென்னை: இலங்கை தமிழருக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக மாநில தேசிய சிறு சேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவரது இல்லத்தில் நிருபர்களை சந்தித்த விஜய டி.ராஜேந்தர் கூறியதாவது;

`மாநில தேசிய சேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருக்கும் நான் தமிழக முதலமைச்சருக்கு என் நிலைப்பாடு குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளவற்றை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்விடயத்தில் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை. ஆனால், இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவே உதவி செய்வது வருத்தத்தை வரவழைக்கிறது. இலங்கை இராணுவத் தளபதி பொன் சேகாவுக்கு இங்கு வரவேற்பு அளிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை தான் இன்று இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி அமர்த்தியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கையில் வாழும் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வெடிகுண்டால் வீழ்த்தினார். அது கண்டனத்க்குரியது. அதற்காக ஒட்டு மொத்த இலங்கையில் வாழும் தமிழ் இனத்தை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

சீக்கிய இனத்தின் கண்ணில் வெண்ணெயை வைத்து விட்டு தமிழினத்தின் கண்களில் சுண்ணாம்பு வைக்கலாமா? இவ் விடயத்தில் இந்திய அரசும் இந்திய அரசின் செயற்பாடு முரண்பாடாக இருக்கிறது. அதனால், இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 29 ஆம் திகதி மதுரையிலும் ஏப்ரல் 5 ஆம் திகதி சென்னையிலும் இலட்சிய தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடத்தவுள்ளேன்.

மாநில தேசிய சிறு சேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடுவது கூட்டணிக் கட்சிக்குள் குந்தகத்தை விளைவித்து விடக் கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவும் இந்தப் பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுவதில் தொடங்கி தமிழக மக்கள் பிரச்சினைக்காக இலட்சிய தி.மு.க. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும்" இவ்வாறு அவர் கூறினார்.

ராஜிநாமாவை முதல்வர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு ஒரு தடவை எடுத்த முடிவை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என அவர் பதிலளித்தார்.

Email this page Your Opinion Print this page
உடையார் கட்டுக்குளத்தில் விமானத் தாக்குதல்
புல்மோட்டை கடலில் மோதல்
முகத்துவாரம் வீடொன்றிலிருந்து வெடிபொருள், கருவிகள் மீட்பு
அல்ஹைதா , தலிபான்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு தமிழர்களுக்கு தனிநாட்டை இந்தியா ஒருபோதும் அனுமதியாது
காச நோயால் தினமும் 4 ஆயிரம் பேர் மரணம்
இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியில் நாடு
மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை
கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் குதிக்க ஐ.தே.க. தீர்மானம்
கிழக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதென்ற நம்பிக்கையே அதிரடிப்படை அகற்றப்பட்டதற்குக் காரணம்
கப்பப் பணத்தை பெற வந்தபோது மடக்கிப் பிடித்த பொலிஸார்
10 புலி உறுப்பினர்களின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி. யூடாக வன்னிக்கு
ஐ.சி.ஆர்.சி.யின் வதிவிடப் பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
அநுராதபுரம் முகாம் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் சிப்பாய் உயிரிழப்பு
`அக்‌ஷன் பாம்' அலுவலக நுழைவாயில் அருகே சென்று உள்ளே பார்த்தபோது சடலங்கள் கிடப்பதைக் கண்டேன்
"மா விலை அதிகரிக்க பிறிமா அனுமதி கோரவில்லை"
20 நாட்களில் 501 புலிகள் பலி
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாமென்கிறது ஐ.நா.
இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பதற்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்
பூசா முகாமிலிருந்து நால்வர் விடுதலை வெலிக்கடை சிறைக்கு மேலும் 10 பேர்
யாழ். நுண்கலைப் பீட மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் சரண்
திடீரென ஏற்பட்ட வயிற்றுளைவால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பலத்த மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கக்கோரிக்கை
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு ஏப்ரல் 9 வரை விண்ணப்பிக்கலாம்
கடும் மழையால் பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை
கண்டி நகர வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
பயண அனுமதி வழங்க புதிய நடைமுறை அமுல்
பொலிஸ் பிரிவுகளை மக்கள் இனங்காணும் வகையில் விபரங்களடங்கிய பெயர்ப் பலகைகள்
பொதுமகனை மோதிக்கொன்ற இராணுவ கவச வாகனம்; ரூபா 5 இலட்சம் பிணையில் விடுவிப்பு
மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிட கருத்தரங்கு
வவுணதீவு, காரைதீவு பிரதேசங்களில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் மக்கள்
மலேசியாவில் இறந்த தமிழ் இளைஞனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு
வட - கிழக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு தமிழ்மொழி பயிற்சி வழங்க நடவடிக்கை
மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு; வான்பாயும் குளங்கள் அநுராதபுரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com