மாவின் விலையினை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பிறிமா நிறுவனம் அனுமதி கோரியதாக வெளியான செய்தியில் எந்த உண்மையுமில்லை என நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் சபை மேலும் தெரிவித்திருப்பதாவது;
பிறிமா நிறுவனம் மாவின் விலையினை 10 ரூபாவினால் அதிகரித்திருப்பதற்கு எமது அதிகாரசபையிடம் எழுத்துமூலம் அனுமதி கோரியிருப்பதாகவும் இந்த அனுமதிக்கான பரிசீலனை செய்யப்படுவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான அனுமதி கோரிய கடிதம் எமக்கு அந்நிறுவனத்தால் அனுப்பப்படவில்லை என்பதை பொதுமக்களுக்கு நாம் தெரிவிக்கின்றோம்.
எனவே, இச்செய்தியில் எந்த உண்மையுமில்லை எனத் தெரிவித்துள்ளது.