Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை
[26 - March - 2008] [Font Size - A - A - A]
கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு அரசாங்க ஆதனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பதினேழாம் அரசியலமைப்புத் திருத்தத்தின் 104 ஆ (4) (அ) ஆம் உறுப்புரைக்கிணங்க ஏதேனும் தேர்தலொன்றில் போட்டியிடுகின்ற எவரேனும் ஒரு வேட்பாளர் அல்லது ஓர் அரசியல் கட்சி அல்லது ஒரு சுயேச்சைக் குழு தேர்ந்தெடுக்கப்படுவதை ஊக்குவிக்கவோ அல்லது தடுக்கவோ அரசாங்கத்திற்கு அல்லது கூட்டுத்தாபனமொன்றிற்கு சொந்தமான அசையும் அல்லது அசையாத ஆதனங்களை வாக்கெடுப்புக் காலக்கெடுவுக்குள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், படகுகள், காணிகள், கட்டிடங்கள் என்பன ஆதனங்களில் அடங்கும்.

இத்தடை "வாக்கெடுப்புக் காலக்கெடு" அதாவது வேட்புமனுக் கோரல் அறிவித்தல்கள் வெளியிடப்பட்ட தினமான கடந்த 13 ஆம் திகதி ஆரம்பித்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் தினம் வரை அமுலிலிருக்கும்.

எதிர்வரும் தினமொன்றில் நடத்தப்படவிருக்கின்ற கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் காலக்கெடுவுக்குள் இத்தடையை விதிக்க தேர்தல்கள் ஆணையாளர் முடிவெடுத்துள்ளார்.

அரச அல்லது கூட்டுத்தாபனங்களின் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஆட்சேர்ப்புக்கள், ஆட்சேர்ப்புக்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் என்பன இவ்அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படக்கூடாத விடயங்களாகும்.

அத்தோடு, இக்காலக்கெடுவுக்குள் அரசாங்கத்தின் செலவில் நடமாடும் சேவைகள், கண்காட்சிகள், விழாக்கள் என்பவற்றை நடத்தாமல் ஒத்திப்போடுவது பொருத்தமானதாகும்.

இவ்விடயங்களை விளக்குகின்ற உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே சகல அரச கூட்டுத்தாபன நிறுவனத் தலைவர்களுக்கு அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரினால் அரசாங்க செயலாளர்களுக்கனுப்பப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாகாண சபைகளைச் சேர்ந்த பல்வேறு தலைமை அலுவலர்களும் அறிவூட்டப்பட்டுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
உடையார் கட்டுக்குளத்தில் விமானத் தாக்குதல்
புல்மோட்டை கடலில் மோதல்
முகத்துவாரம் வீடொன்றிலிருந்து வெடிபொருள், கருவிகள் மீட்பு
அல்ஹைதா , தலிபான்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு தமிழர்களுக்கு தனிநாட்டை இந்தியா ஒருபோதும் அனுமதியாது
காச நோயால் தினமும் 4 ஆயிரம் பேர் மரணம்
இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியில் நாடு
மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை
கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் குதிக்க ஐ.தே.க. தீர்மானம்
கிழக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதென்ற நம்பிக்கையே அதிரடிப்படை அகற்றப்பட்டதற்குக் காரணம்
கப்பப் பணத்தை பெற வந்தபோது மடக்கிப் பிடித்த பொலிஸார்
10 புலி உறுப்பினர்களின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி. யூடாக வன்னிக்கு
ஐ.சி.ஆர்.சி.யின் வதிவிடப் பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
அநுராதபுரம் முகாம் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் சிப்பாய் உயிரிழப்பு
`அக்‌ஷன் பாம்' அலுவலக நுழைவாயில் அருகே சென்று உள்ளே பார்த்தபோது சடலங்கள் கிடப்பதைக் கண்டேன்
"மா விலை அதிகரிக்க பிறிமா அனுமதி கோரவில்லை"
20 நாட்களில் 501 புலிகள் பலி
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாமென்கிறது ஐ.நா.
இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பதற்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்
பூசா முகாமிலிருந்து நால்வர் விடுதலை வெலிக்கடை சிறைக்கு மேலும் 10 பேர்
யாழ். நுண்கலைப் பீட மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் சரண்
திடீரென ஏற்பட்ட வயிற்றுளைவால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பலத்த மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கக்கோரிக்கை
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு ஏப்ரல் 9 வரை விண்ணப்பிக்கலாம்
கடும் மழையால் பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை
கண்டி நகர வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
பயண அனுமதி வழங்க புதிய நடைமுறை அமுல்
பொலிஸ் பிரிவுகளை மக்கள் இனங்காணும் வகையில் விபரங்களடங்கிய பெயர்ப் பலகைகள்
பொதுமகனை மோதிக்கொன்ற இராணுவ கவச வாகனம்; ரூபா 5 இலட்சம் பிணையில் விடுவிப்பு
மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிட கருத்தரங்கு
வவுணதீவு, காரைதீவு பிரதேசங்களில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் மக்கள்
மலேசியாவில் இறந்த தமிழ் இளைஞனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு
வட - கிழக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு தமிழ்மொழி பயிற்சி வழங்க நடவடிக்கை
மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு; வான்பாயும் குளங்கள் அநுராதபுரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com