ஆட்கடத்தலுக்கு எதிரான ஐ.நா.வின் உலக முயற்சி எனும் தலைப்பில் சமூக கரிசனை அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய பயிற்சிப் பட்டறையில் யு.என்.ஒ.டி. சி.யின் தெற்காசியப்பிராந்திய அலுவலகப் பிரதிநிதி ஹரி லூயிஸ் உரையாற்றுவதையும் அருகில் சமூக கரிசனை அமைப்பின் நிறைவேற்று உயர் அதிகாரி சிறியாணி திபல்லா உட்பட அவ்வமைப்பின் பிரதிநிதிகளையும் இங்கு காணலாம்.
மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அக்ஷன் பாம் நிறுவன ஊழியர்கள். பதினேழுபேரின் கொலை தொடர்பான விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற போது மூதூர் பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் சாலிகு ராஜீஸ் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதைக் காணலாம்.
ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பித்திருக்கும் மக்கள் சக்தி படையின் மாவட்ட செயலாளர்கள் அமைப்பாளர்களின் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற போது மேடையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க, தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடன் பிரமுகர்களையும் மாநாட்டில் கலந்து கொண்டோரில் ஒருபகுதியினரையும் இங்கு காண்கிறீர்கள்.