முந்தல் சின்னப்பாடு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை இரவு கரையொதுங்கிய சடலம் மொறட்டுவையைச் சேர்ந்த எஸ்.பி.சிசிரவன்ச (46 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி இவர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றபோது காணாமல் போயிருந்தார் என ஏற்கனவே முறையிடப்பட்டிருந்தது.இவருடன் கடலுக்கு படகில் சென்ற ஏனைய இருவர்களும் உறவினர்களும் சடலத்தை அடையாளம் காட்டியிருந்தனர்.
முந்தல் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சுனில் வீரசிங்க விசாரணைகளை நடத்தி வருகின்றார்.