*சுட்டிக்காட்டுகிறது தமிழ் கூட்டமைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடமாடும் சேவையை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை அரசியல் அமைப்பையும், தேர்தல் விதிகளையும் மீறும் செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.பி.அரியநேத்திரன் தெரிவித்ததாவது,
பொது நிர்வாக அமைச்சு எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடமாடும் சேவையை நடத்த தீர்மானித்துள்ளது. இதற்கான அழைப்பிதழ் எமக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வது ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இடமாற்றம் அல்லது பொதுமக்களுக்கான நடமாடும் சேவையை நடத்த முடியாதென அரசியலமைப்பு தெளிவாக கூறுகிறது.
இவ்வாறான நிலையில் அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் விதிமுறைகளை முற்றாக மீறும் வகையில் பொதுநிர்வாக அமைச்சு நடமாடும் சேவையை ஏற்பாடு செய்துள்ளது.
மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காகவே தேர்தல் காலங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விடயத்தில் உரிய தரப்பினர் உடன் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றார்.