|
யாழ்.குடாநாட்டு மாணவர்களுக்குத் தேவையான ஒரு தொகுதி இலவசப் பாடநூல்கள் மூன்றாவது தடவையாக யால கப்பல் மூலம் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கமைய கடந்த 3 தினங்களாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் சுமார் 1 1/2 இலட்சம் பாடநூல்கள் இக்கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. இவற்றில் தரம் 7, 11 ஆகியவற்றுக்கான புதிய பாடத்திட்ட நூல்களும் அடங்குகின்றன. யாழ். குடாநாட்டிற்கான பாடநூல் தேவை இதன்மூலம் பெருமளவு நிவர்த்தி செய்யப்படும். அதேவேளை, அச்சகங்கள் உரிய நேரத்தில் நூல்களை அச்சிட்டு வழங்காமையே பாடநூல் விநியோக தாமத்திற்கான காரணமென அரச கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளர் லெனின் மதிவாளன் தெரிவித்துள்ளார். |