Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரபாகரன் திரைப்பட இயக்குநர் பீரிஸ் மீது சென்னையில் தாக்குதல்
[27 - March - 2008] [Font Size - A - A - A]
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து சர்ச்சைக்குரிய திரைப்படம் தயாரித்த இலங்கையை சேர்ந்த துஷார பீரிஸ் என்ற இயக்குநர் சென்னையில் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

இலங்கையைச் சேர்ந்த துஷார பீரிஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் ஆய்வு கூடத்தில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் ஜெமினி ஆய்வு கூடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

ஆய்வுகூடம் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பீரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பீரிஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பீரீஸ் அதிர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இன்று வியாழக்கிழமை பா.ம.க.நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

இதையடுத்து இன்று பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் உப.தலைப்புடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.

Email this page Your Opinion Print this page
கிழக்கைப் போன்று வடக்கையும் கைப்பற்றலாமென்ற சிந்தனையால் பாரிய அழுத்தங்களில் சிக்கியிருக்கும் அரசு
முல்லைத்தீவில் விமானங்கள், மன்னாரில் ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதல்
ஓமந்தை அருகே மூவர் சுட்டுக் கொலை மூவர் படுகாயம்; ஐவர் படையினரால் கைது
பிரபாகரன் திரைப்பட இயக்குநர் பீரிஸ் மீது சென்னையில் தாக்குதல்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்
கூட்டணி சேராமல் புரிந்துணர்வு அடிப்படையில் தேர்தல் களமிறங்க ஐ.தே.க., மு.கா. கலந்தாலோசனை
மட்டக்களப்பு படுவான்கரையில் கிளைமோர் தாக்குதல்; 2 பொலிஸார் பலி
பிரிவினை பிரகடனத்துக்கு அண்மித்த காலப்பகுதியில் கொசோவோவிருந்த நிலைமையில் தற்போது இலங்கை
கஞ்சிகுடிச்சாறு காட்டில் கண்ணிவெடி தாக்குதல்; அதிரடிப்படைவீரர் பலி
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்புரிமையை தக்கவைக்க தீவிர முயற்சி
யாழ். குடாநாட்டுக்கான பாடநூல்கள் யால கப்பல் மூலம் அனுப்பப்படும்
முல்லைத்தீவிலிருந்து தமிழகம் சென்ற போது கச்சதீவுக் கடலில் 11 பேர் கடற்படையால் கைது
கிழக்கு தேர்தலில் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து இழுபறி நிலையில்
கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
30 அடி பள்ளத்தில் ஆட்டோ பாய்ந்ததில் ஒருவர் பலி; மூவர் படுகாயமடைந்தனர்
சடலத்தை கொண்டுவர வன்னி எம்.பி.நடவடிக்கை
மட்டக்களப்பில் நடமாடும் சேவையை மேற்கொள்ளும் திட்டம் தேர்தல் விதிக்கு முரண்
வவுனியா ஆஸ்பத்திரியில் இரு சடலங்கள் ஒப்படைப்பு
இலஞ்ச, ஊழல் மோசடிகளில் பொலிஸார் கிராம அதிகாரிகளுக்கே அதிகளவில் தொடர்பு
மின்னல் தாக்கி இளைஞன் பலி
விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட கணவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை
வவுனியா ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
யானை தாக்கி 33 பேரும் 73 யானைகளும் மரணம்
47 விடுதலைப் புலி உறுப்பினர்கள் நடமாட்டம் மொனறாகல காட்டுப்பகுதியில் தேடுதல்
விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மூன்று யுவதிகள் உட்பட ஐவர் கைது
கரை ஒதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளராக மகாசிவம் செயற்பட இடைக்காலத்தடை
கல்விப் புலத்தைப் பற்றி எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் முதலாம் தர மாணவர்கள் அனுமதியில் பல்வேறு குழப்ப நிலை
அராஜக ஆட்சியை ஒழித்துக்கட்ட தொடர்ச்சியான போராட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் ஆரம்பமாகும்
உதிரிப்பாகங்கள் கிடைப்பதில் தாமதம் யாழ்.பஸ் சேவைகள் பெரிதும் பாதிப்பு
`15 வருடங்களுக்கும் மேலாக தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு இன்னமும் நியமனம் இல்லை'
தங்கத்தின் விலை அதிகரிப்பால் யாழ். நகைத் தொழிலாளர் பாதிப்பு
வடபகுதியை சேர்ந்த மூவர் எதுவித விசாரணைகளுமின்றி தடுத்து வைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com