Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஓமந்தை அருகே மூவர் சுட்டுக் கொலை மூவர் படுகாயம்; ஐவர் படையினரால் கைது
[27 - March - 2008] [Font Size - A - A - A]
வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவ முன்னரங்க காவல் நிலைகளுக்கு அருகில் நேற்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களுடன் வந்ததாகக் கூறப்படும் ஐவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பி வந்தவர்களெனக் கூறப்படுவோரே அப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமருக்கிடையில் சிக்குண்டு கொல்லப்பட்டும் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், ஏனைய ஐவரும் காயமெதுவுமின்றி படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மூவரதும் சடலங்களை நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த இராணுவ பொலிஸ் அதிகாரிகள் தப்பி வந்தவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு கூறுகையில்;

10.02.2007 ஆம் ஆண்டு புத்தளம் கற்பிட்டியிலிருந்து 3 வள்ளங்களில் 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் முரசுமோட்டை, வள்ளிபுனம் பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இந்தப் 12 பேரும் தப்பி வந்துள்ளனர். இதில் ஒருவரால் நடக்க முடியாது போகவே அவரை இடை வழியில் விட்டு விட்டு ஏனைய 11 பேரும் வவுனியாவில் இராணுவ காவலரண்களை நோக்கி வந்துள்ளனர்.

இவர்களைக் கண்ட புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தவே, அனைவரும் இராணுவ காவலரண் நோக்கி ஓடி வந்துள்ளனர்.

இவ்வேளையில் இருபக்கங்களிலிருந்தும் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறவே அதற்கிடையில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்தனர். தப்பி வந்த ஐவர் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நண்பகல் 12 மணிக்கும் ஒரு மணிக்குமிடையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து ஓமந்தைக்கு வலது பக்கமாக சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரியொருவர் நீதிபதி முன்னிலையில் கூறுகையில்;

முன்னரங்க காவல் நிலைகளில் நாங்கள் கடமையிலிருந்த போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. இதையடுத்து பலர் எம்மை நோக்கி ஓடி வந்தனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து எமது காவலரணிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் மூவர் கொல்லப்பட்டுக் கிடந்தனர், மூவர் படுகாயமடைந்தனர். ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இறந்தவர்களான நீர்கொழும்பைச் சேர்ந்த கமிலஸ் பெர்னாண்டோ (41 வயது), சுஜித் சிறிமால் (19 வயது), பத்மகுமார (37 வயது) ஆகியோரது உறவினர்களுக்கு உடனடியாக அறிவித்து சடலங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, கைதான ஐவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு இராணுவப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Email this page Your Opinion Print this page
கிழக்கைப் போன்று வடக்கையும் கைப்பற்றலாமென்ற சிந்தனையால் பாரிய அழுத்தங்களில் சிக்கியிருக்கும் அரசு
முல்லைத்தீவில் விமானங்கள், மன்னாரில் ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதல்
ஓமந்தை அருகே மூவர் சுட்டுக் கொலை மூவர் படுகாயம்; ஐவர் படையினரால் கைது
பிரபாகரன் திரைப்பட இயக்குநர் பீரிஸ் மீது சென்னையில் தாக்குதல்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்
கூட்டணி சேராமல் புரிந்துணர்வு அடிப்படையில் தேர்தல் களமிறங்க ஐ.தே.க., மு.கா. கலந்தாலோசனை
மட்டக்களப்பு படுவான்கரையில் கிளைமோர் தாக்குதல்; 2 பொலிஸார் பலி
பிரிவினை பிரகடனத்துக்கு அண்மித்த காலப்பகுதியில் கொசோவோவிருந்த நிலைமையில் தற்போது இலங்கை
கஞ்சிகுடிச்சாறு காட்டில் கண்ணிவெடி தாக்குதல்; அதிரடிப்படைவீரர் பலி
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்புரிமையை தக்கவைக்க தீவிர முயற்சி
யாழ். குடாநாட்டுக்கான பாடநூல்கள் யால கப்பல் மூலம் அனுப்பப்படும்
முல்லைத்தீவிலிருந்து தமிழகம் சென்ற போது கச்சதீவுக் கடலில் 11 பேர் கடற்படையால் கைது
கிழக்கு தேர்தலில் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து இழுபறி நிலையில்
கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
30 அடி பள்ளத்தில் ஆட்டோ பாய்ந்ததில் ஒருவர் பலி; மூவர் படுகாயமடைந்தனர்
சடலத்தை கொண்டுவர வன்னி எம்.பி.நடவடிக்கை
மட்டக்களப்பில் நடமாடும் சேவையை மேற்கொள்ளும் திட்டம் தேர்தல் விதிக்கு முரண்
வவுனியா ஆஸ்பத்திரியில் இரு சடலங்கள் ஒப்படைப்பு
இலஞ்ச, ஊழல் மோசடிகளில் பொலிஸார் கிராம அதிகாரிகளுக்கே அதிகளவில் தொடர்பு
மின்னல் தாக்கி இளைஞன் பலி
விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட கணவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை
வவுனியா ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
யானை தாக்கி 33 பேரும் 73 யானைகளும் மரணம்
47 விடுதலைப் புலி உறுப்பினர்கள் நடமாட்டம் மொனறாகல காட்டுப்பகுதியில் தேடுதல்
விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மூன்று யுவதிகள் உட்பட ஐவர் கைது
கரை ஒதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளராக மகாசிவம் செயற்பட இடைக்காலத்தடை
கல்விப் புலத்தைப் பற்றி எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் முதலாம் தர மாணவர்கள் அனுமதியில் பல்வேறு குழப்ப நிலை
அராஜக ஆட்சியை ஒழித்துக்கட்ட தொடர்ச்சியான போராட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் ஆரம்பமாகும்
உதிரிப்பாகங்கள் கிடைப்பதில் தாமதம் யாழ்.பஸ் சேவைகள் பெரிதும் பாதிப்பு
`15 வருடங்களுக்கும் மேலாக தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு இன்னமும் நியமனம் இல்லை'
தங்கத்தின் விலை அதிகரிப்பால் யாழ். நகைத் தொழிலாளர் பாதிப்பு
வடபகுதியை சேர்ந்த மூவர் எதுவித விசாரணைகளுமின்றி தடுத்து வைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com