Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கொலைகள் தொடர்பாக விசாரணை செய்ய சென்ற போது காந்திசிலையருகில் 7 வெற்று ரவைகளை மீட்டேன்
[28 - March - 2008] [Font Size - A - A - A]
* திருமலை படுகொலை தொடர்பாக பொலிஸ் அதிகாரி சாட்சியம்

யோ.நிமல்ராஜ்

5பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள காலையில் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற நான், காந்தி சிலையருகே இரு வேறு இடங்களிலிருந்த 7 வெற்று ரவைகள் என்னால் மீட்கப்பட்டன.

இவ்வாறு திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐவர் சம்பந்தமான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போது சாட்சியம் அளித்த திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான ஜனக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது;

`அன்றைய தினம் மாலை நான்கு மணியளவில் நானும் இன்னும் நான்கு பொலிஸாரும் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரை கொழும்பில் புலன் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பதற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்று நான்காம் திகதி இரவு 12 மணியளவில் திருகோணமலையை வந்தடைந்தோம்.

அதனைத் தொடர்ந்து காலை ஏழு மணியளவில் பொலிஸ் நிலையத்தில் கடமையை ஏற்ற நான் எந்தவிதமான விஷேட உத்தரவுமின்றி சாதாரண பொறுப்பதிகாரி என்ற ரீதியில் அச்சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக காலை 7.20 மணிக்கு சம்பவ இடத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றேன்.

அங்கு காந்தி சிலைக்கு அண்மித்த பகுதிகளில் இருவேறு இடங்களிலிருந்து ஏழு வெற்று ரவைகள் என்னால் மீட்கப்பட்டன.

அவற்றை அரச ஆய்வுத் திணைக்களத்திற்கும் அனுப்பினேன்.

இந்நிலையில், காலை ஒன்பது மணியளவில் திரும்பவும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது, நீதிவான் இது தொடர்பான விசாரணைகளுக்காக காந்தி சிலையடிக்கு செல்கின்றார் என்பதை அறிந்து திரும்ப காலை 9.15 மணியளவில் காந்தி சிலையடிக்குச் சென்றேன்.

இதற்கு முன்னர் காலையில் ஏழுமணிக்குக் கடமையைப் பொறுப்பேற்ற போது சவாஹிர் என்னிடம் இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.

நான் இப்பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஆறுமாதத்திற்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்தே கடமையாற்றி வருகின்றேன்.

அத்துடன், இது சம்பந்தமான விசாரணைகளுக்காக மூன்றாம் திகதி வரை எவரும் அப்பகுதிக்குச் செல்லவும் இல்லை விசாரணைகளை மேற்கொள்ளவுமில்லை.

வீரக்கொடி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எனக்கு எதுவிதமான தகவல்களும் தெரியாது.

அவரின் கொலை எனது காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம்.

இதனைத் தொடர்ந்தே விஷேட அதிரடிப் படையினர் இங்கு வருகை தந்ததாகக் கூறப்பட்டாலும் இவர்களின் வருகை தொடர்பாக எனக்கு எவரும் அறிவிக்கவுமில்லை. அத்துடன், எனக்கு வருகிறார்களென்றும் தெரியாது. ஆனால், அவர்களின் நடவடிக்கைகளுக்கு கபில ஜெயசேகர என்பவர்தான் பொறுப்பாக இருக்கிறார் என்று பின்னர் அறிந்து கொண்டேன்.

அத்துடன், இவ்விஷேட அதிரடிப் படையினரில் எத்தனை பேர் வந்தனர். எங்கு தங்கி இருந்தனர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டேன்'என நேற்றைய சாட்சியத்தின் போது அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரிப்பு
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் சுடப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது
ஐ.நா.வில் திபெத் நெருக்கடி குறித்து விவாதிப்பதை சீனா தடுத்ததற்கு இலங்கை உட்பட 5 நாடுகள் ஆதரவு
ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
இஸ்ரேலிய கிபிர்களுடன் சீனத் தயாரிப்பான எவ்-7 ரக விமானங்கள் வன்னியில் தாக்குதல்
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம்
இலங்கையின் ஆயுதக் கொள்வனவு இந்தியா கடும் விசனம் தெரிவிப்பு
பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதக்களைவு நியாயமற்றது
மணலாற்றில் இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் படையினருக்கு அதிக இழப்பு
தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மீட்பு
வவுனியாவுக்கும் மதவாச்சிக்குமிடையே விசேட பஸ்சேவை நடத்த இணக்கம்
பூச்சி மருந்து குடித்த 14 மாணவிகளுக்கு வயிற்றுவலி
புலிகளின் இரு சடலங்கள் வன்னியில் ஒப்படைப்பு
25% பாடசாலைகளில் இன்னமும் முதலாம் தர அனுமதி பூர்த்தியாகவில்லை
குடும்பப் பெண்ணொருவருடன் தகாத முறையில் ஈடுபட முயன்ற இரு பொலிஸார் மீது நடவடிக்கை
5 வருடங்களாக கொழும்பில் வசிக்கும் பெண் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் அறவிடப்படும்
கற்குழி வெடி விபத்தில் மூவர் படுகாயம்
இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரி ராமதாஸ், திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மகேஸ்வரன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு
யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
பிரபாகரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு
கந்தப்பளைத் தோட்டத்தில் வெடிமருந்து மீட்பு
பொறி வெடிகளில் சிக்கி 4 படையினர் பலி
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
மட்டக்குளி பஸ்ஸில் பயணி மீது தாக்குதல்
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
`மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியாதென கூறினார் கேதீஸ்வரன்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஓரணியில் 3 தமிழ் கட்சிகள் போட்டி
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
லிபியாவில் 1 இலட்சம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு பெற உடன்படிக்கை
கொலைகள் தொடர்பாக விசாரணை செய்ய சென்ற போது காந்திசிலையருகில் 7 வெற்று ரவைகளை மீட்டேன்
சொந்த இடத்தில் அகதிகளாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்
மிகிந்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் கடல்கோளில் காணாமல்போனவரல்ல
ஏறாவூரில் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு
மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டுமென கடும் வலியுறுத்தல்
அம்பாறையில் 6 பேருக்கு டெங்கு
மன்னார் மாவட்டத்தில் அடை மழையினால் நெற்செய்கையும் மேட்டு நிலச்செய்கையும் அழிவு
அம்பாறை மீனவர்களுக்காக 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மீராவோடை இராணுவத்தினரால் கைதான இரு சந்தேக நபர்களும் நீதிமன்றால் விடுதலை
அடைமழை ஓய்ந்ததைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு
சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தால் 3 ஆண்டு செயல்திட்டம் அமுல்
புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை தருவிக்க ஏற்பாடு
லொறி 500 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் சாரதி மரணம்
ஹிக்கடுவ கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
தோட்டப் பகுதிகளுக்கு தமிழ்மொழி தெரிந்த கிராமசேவை அதிகாரிகளை நியமிக்க கோரி மகஜர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com